Saturday, July 7, 2018

23/360 எனது தேகமும் உனக்காகவே

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்


ஜ்யேஷ்ட பகுள நவமி

23/360 எனது தேகமும் உனக்காகவே

சிர நின்ன சரணக்கெ எகருவந்தெ மாடோ
கர நின்ன பூஜெ விஸ்தரவாகி மாடலின்னா
சரிஸலு பாதகளு புண்யதேஷகளல்லி
ஹரினின்ன நாம உச்சரிசலு அனனவு
வரனாசிக கர்ணசிரி அரஸினெ நின்ன
வரகதெ நிர்மால்யகளு சவியலி அனுதின
பரம புருஷ மிக்க இருவ இந்திரியகளெல்ல
சரியதெ நின்ன சேவெயனு பொந்திரலய்ய
சரசிஜ தளனயன வேணுகோபாலவிட்டல
இருளு ஹகலு நின்னுச்சரிசுவந்தெ மாடோ || -- ஸ்ரீவேணுகோபாலவிட்டலா

ஸ்ரீஹரி கருணையுடன் அளித்த இந்த தேகம் அவனுடையதே. அவனுக்காகவே இந்த உடல் பயன்பட வேண்டும். இந்த உடல் வருவதற்கும், இருப்பதற்கும், அழிவதற்கும் என அனைத்திற்கும் ஸ்ரீஹரியே காரணம். அதற்காகவே தேனத்யக்தேன புஞ்சீதா:என்றார். தேகத்தில் இருக்கும் அனைத்து இந்திரியங்களும் ஸ்ரீஹரிக்காகவே என்று ஸ்ரீஸ்ரீபாதராஜர் கூறுகிறார்.

ஷிர நின்ன சரணக்கெரகலி சக்‌ஷு
எரகதிந்தலி நின்ன நோடலி ஹரியே
கரண கீதங்கள கேளலி நாஸிக
நிருமால்யனுதின க்ராணிசலி ஹரியே |
நாலிகெ நின்ன கொண்டாடலி என்ன
தோளு கரங்கள முகியலி ஹரியே
சித்த நின்னொளு முளுகாடலி நின்ன
பக்தஜனர சங்க தொரகலி ஹரியே
வ்ருத்தி தத்வ யோகாப்யாசக்காகலி ரங்க
விட்டல நின்ன தயவாகலி ஹரியே || --ஸ்ரீஸ்ரீபாதராஜர்

இதுவே ஆத்ம நிவேதனம் ஆகும். முதலில் நம் இந்திரியங்களினால் ஆகும் தோஷங்களை அறிந்து, அந்த இந்திரியங்கள் நற்பலனைப் பெறுவதற்கு, தாசர்கள் பாடல்களை அறிந்து பயன்பெறுவோமாக.

***

No comments:

Post a Comment