Showing posts with label Haridasa Darpana. Show all posts
Showing posts with label Haridasa Darpana. Show all posts

Wednesday, October 5, 2022

[பத்யம் #137] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #137] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 137]

மங்க3ளம் ஸ்ரீ லகுமிலோலகெ3

மங்க3ளம் ஸ்ரீ வாயுபிதனிகெ3

மங்க3ளம் தா3ஸோஹமெம்ப3 நிருத பொரெவனிகெ3 |

மங்க3ளம் கு3ருவந்த1ரங்க3கெ3

மங்க3ளம் நிஜ தா3ஸப்ரீயகெ3

மங்க3ளவ பாடு3வெனு ஸ்ரீ ரமாகாந்த விட்டலகெ3 ||137 

ஸ்ரீலகுமிலோலகெ - ஸ்ரீலட்சுமியின் தலைவனுக்கு; ஸ்ரீவாயுபிதனுக்கு - ஸ்ரீவாயுதேவரின் தந்தைக்கு; தாஸோஹமெம்பர - தாஸோஹம் என்பவர்களை; நிருத பொரெவனிகெ - எப்போதும் காப்பவனுக்கு; குருவந்தரங்ககெ - குருவின் அந்தர்யாமியாக இருப்பவனுக்கு; நி தாஸப்ரீயகெ - தாஸர்களை எப்போதும் விரும்புபவனுக்கு; மங்களம் - மங்களம் உண்டாகட்டும்; ஸ்ரீரமாகாந்த விட்டலகெ - ஸ்ரீரமா காந்த விட்டலனுக்கு; மங்களவ பாடுவெனு - மங்கள கோஷம் செய்கிறேன். 

ஹரிதாஸ தர்பண என்னும் இந்த கிருதியின் கடைசி பத்யத்தினை ஸ்ரீஹரிக்கு, தன்னுடைய பிம்பமூர்த்திக்கு மங்களம் பாடியவாறு முடித்து வைக்கிறார். 

ஸ்ரீலட்சுமியின் தலைவனுக்கு, ஸ்ரீவாயுதேவரின் தந்தைக்கு, தாஸோஹம் என்பவர்களை எப்போதும் காப்பவனுக்கு, குருவின் அந்தர்யாமியாக இருப்பவனுக்கு, தாஸர்களை எப்போதும் விரும்புபவனுக்கு, மங்களம் உண்டாகட்டும். ஸ்ரீரமா காந்த விட்டலனுக்கு மங்கள கோஷம் செய்கிறேன். 

அஸ்மத் குர்வந்தர்கத பாரதிரமண முக்யபிராணாந்தர்கத ஸ்ரீஜகன்னாத கேசவ ப்ரியதாம்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

 ***


Tuesday, October 4, 2022

[பத்யம் #136] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #136] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 136]

ஸந்தி3ரலு 3ஹுதா3ன்ய 311

ஒந்து3 ஸாவிரதெ3ண்டு1 நூரர

முந்தெ3 அரவத்ததி4கவாகி3 வருஷவித3ரல்லி |

குந்த33லெ ஸம்பூர்ணகெ3ய்ஸித3

3ந்து4ரத3 பத்3யக3 மணிஸர

கந்த3ரதொ3ளர்ப்பிபேனு ஸ்ரீ ரமாகாந்த1 விட்ட2லகெ3 ||136 

பஹுதான்ய - பஹுதான்ய ஆண்டு; ஸந்திரலு - முடிந்திருக்க; கதஷக - ஷக ஆண்டு; ஒந்து ஸாவிரதெண்டு நூரர - 1800; முந்தெ அரவத்ததிகவகிஹ - 60; வருஷதல்லி - இந்த ஆண்டில்; குந்ததலெ - எவ்வித குறை / தோஷங்களும் இன்றி; ஸம்பூர்ணகெய்ஸித - முடித்த; பந்துரத - அழகான; பத்யகள - இந்த பத்யங்களின்; மணிஸர - மாலையை; ஸ்ரீரமாகாந்த விட்டலகெ - ஸ்ரீரமாகாந்த விட்டலனுக்கு; கந்தரதொளு - அவனுடைய கழுத்தில்; அர்ப்பிபேனு - அர்ப்பிக்கிறேன். 

இந்த கிருதியை முடித்த ஆண்டினை இவ்வாறு சொல்கிறார் சக ஆண்டு 1860. அதாவது கிபி 1938. இந்த ஆண்டில் இந்த கிருதியை எழுதி முடித்திருப்பதாக சொல்கிறார் ஸ்ரீதாஸர். பஹுதான்ய என்று சொல்வதும் சரியாக 1938க்கு பொருந்தி வருகிறது என்பதை அறிகிறோம். இதனை தன் பிம்பமூர்த்தியான ஸ்ரீரமாகாந்த விட்டலனுக்கு சமர்ப்பிக்கிறார். 

பஹுதான்ய ஆண்டு முடிந்திருக்க, ஷக ஆண்டு 1860ம் ஆண்டில், எவ்வித குறை / தோஷங்களும் இன்றி, முடித்த இந்த பத்யங்களின் மாலையை ஸ்ரீரமாகாந்த விட்டலனுக்கு, அவனுடைய கழுத்தில் அர்ப்பிக்கிறேன்.

***


Monday, October 3, 2022

[பத்யம் #135] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #135] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 135]

தா3 4ர்மத3 கோ1விது3 கம

லே கருணதி3 3ரெயிஸித3 உப

தே3 மாதுக3ளார்த்த 4க்தரிகி3ஷ்ட ஸல்லிஸலி |

லே4க்தி விரக்தி ஞானவ

ஶிபரிகெ3 ரமே 3யத3லி

தா1ஸு தா1ஸிகெ3 த்ராஸு கொட33லெ போஷிஸுத்திரலி ||135 

தாஸ தர்மத - ஹரிதாஸ தர்மத்தின்; கோஷவிது - அகராதி இது ஆகும்; கமலேஷ - ஸ்ரீஹரி; கருணதி பரெயிஸித - கருணையுடன் அருளி எழுத வைத்தான்; உபதேஷ மாதுகள - இந்த உபதேச பேச்சுக்களின்; அர்த்த - விஷயம்; பக்தரிகெ - பக்தர்களுக்கு; இஷ்ட ஸல்லிஸலி - அவர்கள் விரும்பியதை கொடுக்கட்டும்; பக்தி விரக்தி ஞானவ - ஞான பக்தி விரக்திகளை; லேஷ - சிறிதளவு; ஆஷிபரிகெ - வேண்டுபவர்களுக்கு; ரமேஷ - ஸ்ரீஹரி; தாஸு தாஸிகெ - ஒவ்வொரு மணித்துளிக்கும் (எப்போதும்); த்ராஸு கொடதலெ - கஷ்டத்தைக் கொடுக்காமல்; தயதலி - கருணையுடன்; போஷிஸுத்திரலு - காத்துக் கொண்டிருக்கட்டும். 

இந்த கிருதியின் பலன்களை மேலும் தொடர்ந்து சொல்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

இந்த கிருதியானது, ஹரிதாஸ தர்மத்தின் அகராதி ஆகும். ஸ்ரீஹரி கருணையுடன் அருளி, என்னை இதனை எழுத வைத்தான். இந்த உபதேச பேச்சுக்களின் விஷயம் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பியதை கொடுக்கட்டும். ஞான பக்தி விரக்திகளை சிறிதளவு வேண்டுபவர்களுக்கு, ஸ்ரீஹரி எப்போதும் நிரந்தரமாக கொடுத்து, கருணையுடன் காத்துக் கொண்டிருக்கட்டும்.

***