Showing posts with label Students. Show all posts
Showing posts with label Students. Show all posts
Friday, November 3, 2017
Saturday, July 1, 2017
ஆச்சார்ய மத்வர்
ஆச்சார்ய மத்வர்
வித்யாலயாவின் 20வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் வந்த கட்டுரை
கன்னடத்தில் : திருமதி ஜலஜா என். ராவ்
தமிழில் : திருமதி சுமதி ராவ்
***
பிரம்மாந்தா குருவஸ்ஸாக்ஷாத் இஷ்டம் தைவ: ஶ்ரீய:பதி:
ஆச்சார்ய: ஶ்ரீமதாசார்யா: சந்துமே ஜன்ம ஜன்மனி
ஜலஜா என். ராவ்
முன்னாள் மாணவி
பெங்களூரு.
***
வித்யாலயாவின் 20வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் வந்த கட்டுரை
கன்னடத்தில் : திருமதி ஜலஜா என். ராவ்
தமிழில் : திருமதி சுமதி ராவ்
***
பிரம்மாந்தா குருவஸ்ஸாக்ஷாத் இஷ்டம் தைவ: ஶ்ரீய:பதி:
ஆச்சார்ய: ஶ்ரீமதாசார்யா: சந்துமே ஜன்ம ஜன்மனி
ஆன்மீக வானத்தில் ஜொலிக்கின்ற தத்வவாத நட்சத்திர மண்டலத்திற்கு ஶ்ரீமன் மத்வாச்சார்யார் சூரியனைப்போல திகழ்கிறார். அவர் உதித்ததால், வாடியிருந்த வைணவ தாமரைகள் மலர்ந்து நின்றன. அவற்றின் நறுமணம் திசைகள் எங்கும் பரவியதில் வைணவ உள்ளங்களில் உல்லாசமும் பக்தியும் நிறைந்து வழிந்தன. கருகி விட்ட வைணவ கொடி, ஆசார்யரின் தேஜோமயமான உஷ்ணத்தால் மீண்டும் பசுமை நிறைந்து, நியாயமான தத்துவங்களின் ஆதரவு பெற்று மிக அழகாக காணப்பட்டது.
ஶ்ரீமத்வாசார்யார் தோன்றிய காலத்தில் மக்கள் தத்துவ சாஸ்திரங்களின் நிஜமான பொருள் புரியாமல் சந்தேகங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள். பரமாத்மாவையும் அவன் உண்மையான அடையாளத்தையும் அறிந்து கொள்ளாமல், நடைமுறையில் இருந்த பழக்க வழக்கங்களே எல்லாவற்றிற்கும் தீர்வு என்று தவறாக நினைத்து பிரமித்திருந்தனர். நாத்திக வாதமும் தலை தூக்க ஆரம்பித்த நேரத்தில் சூன்ய வாதமும் ஒரு மதம் என்ற எண்ணம் கோலோச்சிக் கொண்டிருந்தது.
இந்த இருண்டு போன சமூகச்சூழலில் ஆசார்யார் தோன்றி ஆன்மிக அழிவுக்கு காரணமான உலக மரத்தின் வேரை ஆராய்ந்து, அதற்கு தீர்வு பக்தி மார்க்கம்தான் என்று முடிவுக்கு வந்தார். சனாதன தர்மத்திற்கு மறுவாழ்வு அளித்து அதை மீண்டும் நிறுவினார்.
பரமாத்மா சர்வ வல்லமை படைத்தவன். எல்லா ஜீவராசிகளும் அவனின் தாசர்கள். கண்ணிற்கு புலப்படும் இந்த உலகம் நிஜம். ஆனாலும் படைத்தல் காத்தல் அழித்தல், ஞானம், பந்தம், மோக்ஷம் இவற்றிற்கு பரமாத்மாவே காரணம் . அவன் ஞானானந்தமான அழகான வடிவுள்ளவன். அவன் எல்லா நற்குணங்களும் நிறைந்தவன். அவனுக்கு வடிவமுண்டு. இத்தகைய பரமாத்மாவை ஆராதித்து அவனின் எள்ளளவு கருணையால் மட்டுமே மனிதர்கள் விரும்பிய எல்லாவற்றையும் பெறலாம்.
இதற்கு ஒரே வழி பக்திதான். அபார பக்தியால் மட்டுமே அவனின் கருணை பெற முடியும். பரமாத்மாவின் அற்புதமான விவரிக்க இயலாத மகத்தான காரியங்களை அறிவதன் மூலம் பக்தி வலுவடையும்.மனைவி - குழந்தை - உற்றாரிடம் கொள்ளும் பாசத்தை விட பரமாத்மாவிடம் அதிகமான பாசம் கொண்டு மனிதன் தன் கடமைகளை பற்றற்று செய்ய வேண்டும். பொருட்களிலிருந்து கிடைக்கும் சுகம் நிரந்தரமில்லை என்று அறிந்து, கடமை நிறைவேற்றுவது போல் வாழ்க்கையை நடத்தி அதன் பலனை பரமாத்மாவிற்கு சமர்பித்து, சுயநலமற்ற வழியில் நடந்தால் மனிதனின் அகம்பாவம் அழியும். உள்மனம் சுத்தமாகும், பரமாத்மாவில் நிலைக்கும். இதற்கு மாறாக நடந்தால் விருப்ப வெறுப்புகளின் ஈர்ப்புக்கு பலியாகி, மமதையில் சிக்கி தீய எண்ணங்களுக்கு அடிமையாகி பிறப்பு இறப்பு சக்கரத்தில் மாட்டிக்கொண்டு நரக வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.
ஹரிதாஸ சாகித்ய மஹாவித்யாலயா தங்களின் 20வது ஆண்டு விழாவை கொண்டாடுவது சந்தோஷமான விஷயம். இன்னும் நிறைய மாணவர்கள் சேர்ந்து தங்களின் ஹரிதாச இலக்கியத்தை பரப்பும் காரியம் அபாரமாக முன்னேற பிரார்த்திக்கிறேன்.
ஜலஜா என். ராவ்
முன்னாள் மாணவி
பெங்களூரு.
***
Tuesday, April 18, 2017
பகவானின் அனுபவம்
பகவானின் அனுபவம்
வித்யாலயாவின் 20ம் ஆண்டு விழா மலரில் வெளிவந்த கட்டுரை
கன்னட மூலம்: திருமதி. மமதா
தமிழில்: திருமதி. சுமதி ராவ்
***
"சத்திய ஜககிது பஞ்ச பேதவு நித்ய ஶ்ரீகோவிந்தன" என்பது போல இந்த உலகம் முழுவதும் உண்மை மற்றும் எல்லா உயிருள்ள மற்றும் ஐடப்பொருட்களிலிருந்து வேறுபட்டவன் பரமாத்மா. இந்த உலகத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றையும் பரமாத்மா லக்ஷ்மியுடன் கூடி செய்கிறான். அத்தனை ஜீவராசிகளுக்கும் அவரவர் யோக்யதைக்கேற்ற நிலையை தருவதற்காகவே இந்த படைத்தல் முதலான காரியத்தை செய்கிறான். அப்படியென்றால் பரமாத்மாவுக்கு இதனால் என்ன லாபம் ? இது பரமாத்மாவின் லீலை மற்றும் அவன் கருணையே. வேதங்கள் புகழுகிற பரமாத்மாவுக்கு சோர்வு , லாப நஷ்டங்கள், சுக துக்கங்கள் கிடையாது.
"மளல மனெகள மாடி மக்களு
கெலவு காலதலாடி மோததி
துளிது கெடிசுவ தெரதி
லக்ஷ்மி ரமண லோககள"
குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடி பிறகு அதை மிதித்து உடைப்பது போல் பரமாத்மா லோகத்தை படைத்து அழிக்கிறான் . அப்படியென்றால் இந்த பரமாத்மா எங்கு இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? அவனை அறிந்துக்கொள்வதுதான் எப்படி? என்றால் அவன் இல்லாத இடமே இல்லை. இவனை சொல்லாத வார்த்தைகளே இல்லை, அணுவில் அணுவாக, பிரம்மாண்டத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறான் . எல்லா விதத்திலும் முழுமையானவனாக இருக்கிறான் . அவனை பகவத் அனுபவத்தின் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும்.
லவண மிஷ்ரித ஜலவு தோர்புது
லவனதொபாதியலி ஜிஹ்வெகெ
விவரகைஸலு ஷக்யவாகுவுதேனோ
நோள்பரிகே
உப்பு கலந்த நீரை ருசித்தால் மட்டும்தான் அதில் உப்பு இருப்பது தெரியும். பார்ப்பதால் மட்டும் வெறும் நீரா அல்லது உப்பு கலந்த நீரா என்று தெரிந்து கொள்ள முடியாது. அவ்வாறே பரமாத்மாவை அனுபவத்தில்தான் அறிந்துக்கொள்ள முடியும்.
கரும்பை கடித்து சுவைத்தால்தான் அதன் இனிமை தெரியுமே தவிர அது பார்ப்பதற்கு வெறும் கட்டையைப் போலத்தான் இருக்கும். அப்படியென்றால் பகவத் அனுபவத்தை அடையும் வழியென்ன? அதனால் ஜீவனுக்கு என்ன லாபம்?
பரமாத்மாவை வேதங்களின், உபநிஷத்தின் மூலமாக , புராண புண்ய கதைகளை கேட்பதன் மூலமாக, ஹரிதாஸ கீர்த்தனைகளை பாடி புகழ்வதன் மூலமாக, ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் குருகளின், பெரியவர்களின் சேவையின் மூலமாக அடையலாம். அனைத்து வார்த்தையின் பொருள் அவனே என்று அறிந்தவன் பேசும் பேச்சே அவன் மந்திரமாகும். பரமாத்மாவை நினைத்த கணமே பண்டிகையாகும். அவனின் சேவை என்று நினைத்து செய்யும் எல்லா வேலையும் பூஜைதான். அவனை நினைத்த இடமே புண்ணிய க்ஷேத்திரம். இவ்வாறு எந்த ஜீவன் தான் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் பரமாத்மாவை அனுசந்தானம் செய்கிறானோ, அப்படிப்பட்டவனுக்கு ஆயிரமாயிரம் ஜன்மங்களின் சாதனைக்கு பிறகு கருணா சாகரனான பரமாத்மா அபரோக்ஷ ஞானத்தை வழங்கி இந்த பிறப்பு இறப்பு என்னும் சக்கரத்தில் இருந்து விடுவித்து மோக்ஷம் என்னும் ஆனந்தத்தை அளிக்கிறான்.
கலியுகத்தில் சிறு சாதனைக்கு கூட மகத்தான புண்ணியம் கிட்டும். "மானவ ஐன்ம தொட்டது" என்று சொன்னதைப்போல் எல்லோரும் நல்வழியில் நடந்து, பக்தியால் பகவத் சாதனை செய்து, பரமாத்மாவின் அருளை பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
Haridasa Sahitya Mahavidyalaya and Research Center தங்களின் 20வது ஆண்டு விழாவை 3.7.2016 அன்று கொண்டாடுகிறார்கள் . எல்லா மாணவர்களுக்கும் நல்லது நடக்கட்டும் என வேண்டுகிறேன்.
***
வித்யாலயாவின் 20ம் ஆண்டு விழா மலரில் வெளிவந்த கட்டுரை
கன்னட மூலம்: திருமதி. மமதா
தமிழில்: திருமதி. சுமதி ராவ்
***
"சத்திய ஜககிது பஞ்ச பேதவு நித்ய ஶ்ரீகோவிந்தன" என்பது போல இந்த உலகம் முழுவதும் உண்மை மற்றும் எல்லா உயிருள்ள மற்றும் ஐடப்பொருட்களிலிருந்து வேறுபட்டவன் பரமாத்மா. இந்த உலகத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றையும் பரமாத்மா லக்ஷ்மியுடன் கூடி செய்கிறான். அத்தனை ஜீவராசிகளுக்கும் அவரவர் யோக்யதைக்கேற்ற நிலையை தருவதற்காகவே இந்த படைத்தல் முதலான காரியத்தை செய்கிறான். அப்படியென்றால் பரமாத்மாவுக்கு இதனால் என்ன லாபம் ? இது பரமாத்மாவின் லீலை மற்றும் அவன் கருணையே. வேதங்கள் புகழுகிற பரமாத்மாவுக்கு சோர்வு , லாப நஷ்டங்கள், சுக துக்கங்கள் கிடையாது.
"மளல மனெகள மாடி மக்களு
கெலவு காலதலாடி மோததி
துளிது கெடிசுவ தெரதி
லக்ஷ்மி ரமண லோககள"
குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடி பிறகு அதை மிதித்து உடைப்பது போல் பரமாத்மா லோகத்தை படைத்து அழிக்கிறான் . அப்படியென்றால் இந்த பரமாத்மா எங்கு இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? அவனை அறிந்துக்கொள்வதுதான் எப்படி? என்றால் அவன் இல்லாத இடமே இல்லை. இவனை சொல்லாத வார்த்தைகளே இல்லை, அணுவில் அணுவாக, பிரம்மாண்டத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறான் . எல்லா விதத்திலும் முழுமையானவனாக இருக்கிறான் . அவனை பகவத் அனுபவத்தின் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும்.
லவண மிஷ்ரித ஜலவு தோர்புது
லவனதொபாதியலி ஜிஹ்வெகெ
விவரகைஸலு ஷக்யவாகுவுதேனோ
நோள்பரிகே
உப்பு கலந்த நீரை ருசித்தால் மட்டும்தான் அதில் உப்பு இருப்பது தெரியும். பார்ப்பதால் மட்டும் வெறும் நீரா அல்லது உப்பு கலந்த நீரா என்று தெரிந்து கொள்ள முடியாது. அவ்வாறே பரமாத்மாவை அனுபவத்தில்தான் அறிந்துக்கொள்ள முடியும்.
கரும்பை கடித்து சுவைத்தால்தான் அதன் இனிமை தெரியுமே தவிர அது பார்ப்பதற்கு வெறும் கட்டையைப் போலத்தான் இருக்கும். அப்படியென்றால் பகவத் அனுபவத்தை அடையும் வழியென்ன? அதனால் ஜீவனுக்கு என்ன லாபம்?
பரமாத்மாவை வேதங்களின், உபநிஷத்தின் மூலமாக , புராண புண்ய கதைகளை கேட்பதன் மூலமாக, ஹரிதாஸ கீர்த்தனைகளை பாடி புகழ்வதன் மூலமாக, ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் குருகளின், பெரியவர்களின் சேவையின் மூலமாக அடையலாம். அனைத்து வார்த்தையின் பொருள் அவனே என்று அறிந்தவன் பேசும் பேச்சே அவன் மந்திரமாகும். பரமாத்மாவை நினைத்த கணமே பண்டிகையாகும். அவனின் சேவை என்று நினைத்து செய்யும் எல்லா வேலையும் பூஜைதான். அவனை நினைத்த இடமே புண்ணிய க்ஷேத்திரம். இவ்வாறு எந்த ஜீவன் தான் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் பரமாத்மாவை அனுசந்தானம் செய்கிறானோ, அப்படிப்பட்டவனுக்கு ஆயிரமாயிரம் ஜன்மங்களின் சாதனைக்கு பிறகு கருணா சாகரனான பரமாத்மா அபரோக்ஷ ஞானத்தை வழங்கி இந்த பிறப்பு இறப்பு என்னும் சக்கரத்தில் இருந்து விடுவித்து மோக்ஷம் என்னும் ஆனந்தத்தை அளிக்கிறான்.
கலியுகத்தில் சிறு சாதனைக்கு கூட மகத்தான புண்ணியம் கிட்டும். "மானவ ஐன்ம தொட்டது" என்று சொன்னதைப்போல் எல்லோரும் நல்வழியில் நடந்து, பக்தியால் பகவத் சாதனை செய்து, பரமாத்மாவின் அருளை பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
Haridasa Sahitya Mahavidyalaya and Research Center தங்களின் 20வது ஆண்டு விழாவை 3.7.2016 அன்று கொண்டாடுகிறார்கள் . எல்லா மாணவர்களுக்கும் நல்லது நடக்கட்டும் என வேண்டுகிறேன்.
***
Sunday, April 9, 2017
தாஸ சாகித்யமும் அதன் அமுதமும்
தாஸ சாகித்யமும் அதன் அமுதமும்
ஹரிதாஸ சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை
கன்னட மூலம் : ஸ்மிதா
தமிழில் : திருமதி. சுமதி ராவ்
***
தாஸ சாகித்யம், மத்வ சித்தாந்தத்தின் தத்துவங்கள் மற்றும் அதன் ஆன்மிக ரகசியங்களை சரளமான கன்னடத்தில் சொல்கிறது. ஹரிதாஸர்களின் சேவை மிக மேன்மையானது. அனைவரையும் பக்தி பாதைக்கு அழைத்துச்சென்றது இதன் சிறப்பு. தாஸ சாகித்யம் சர்வ மூல க்ரந்தங்களின் சாரம். இது பக்தியை சொல்லும் இலக்கியம்.
ஶ்ரீமத்வாச்சார்யார் உண்மையில் எல்லோருக்கும் ஜகத்குருதான். ஆனால் சாதாரண மனிதர்களால் சமஸ்கிருத்த்தையும் வேதங்களையும் படித்து புரிந்துகொள்ள முடியாத காரணத்தால் அவற்றை முதல்முறையாக கன்னடத்தில் எழுதி பிரசாரம் செய்தவர் ஶ்ரீ நரஹரி தீர்த்தர். அதன்பின்னர், ஶ்ரீபாதராஜர், ஶ்ரீபுரந்தரதாஸர், ஶ்ரீகனகதாஸர் போன்ற தாஸ ச்ரேஷ்டர்கள் தங்கள் அரிதான படைப்புகளால் பக்தி இலக்கியத்திற்கு மகத்தான தொண்டாற்றி அதை பேணி வளர்த்து இன்றளவும் நாம் அதை படித்து மகிழ வழி வகுத்திருக்கின்றனர்.
பிறப்பு மற்றும் இறப்பிற்கு இடையில் உள்ள வாழ்க்கையில் நாம் எவ்வாறு பக்தி சாதனை செய்ய வேண்டும் என்பதை தெளிவான முறையில் தங்கள் கீர்த்தனைகள் மூலம் எடுத்துச்செல்லி நம்மை இறைபக்தி என்னும் பாதையில் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு பக்தி வரவேண்டும் என்றால் அந்த படைப்புகளின் மீது ஈடுபாடு இருக்க வேண்டும். ஈடுபாடு வந்தால் நம்பிக்கை வரும், நம்பிக்கை வந்தால் ஆர்வம் வரும், ஆர்வம் வந்தால் பக்தி வரும். பக்தி வந்தால் இறை சாதனை வழியில் சென்று முக்தி அடையலாம். இதற்கு மேல் வேறென்ன வேண்டும். இவ்வாறு தாஸ சாகித்யம் பக்தி மற்றும் முக்திக்கு படிக்கட்டுகளாக திகழ்கின்றது.
எதற்காக தாஸ சாகித்யத்தை படிக்க வேண்டும்? அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்றால், அதில் என்ன இல்லை என்றுதான் கேட்க வேண்டும். இதை ருசித்தவருக்குத்தான் இதன் இனிமை தெரியும். ஹரிதாஸர்கள் வர்ணிக்காத விஷயமே இல்லை. எல்லாம் அம்பைப்போல் நேராக மனதைத் தொடும்படி உள்ளன. மற்றும் என்றும் அழியாத வண்ணம் உள்ளன. பகவானை அறிந்துக்கொள்ளவும், தாஸ ச்ரேஷ்டர்கள் படைத்த காவியங்கள் சிறப்பானவை. ஆகையால், தாஸ சாகித்யத்தில் என்ன உள்ளது என்று கேட்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம்தான்.
கலியுகத்தில் பகவத் நாம ஸ்மரணைக்கு அதிக சிறப்பு. ஆகையால், பகவான் அனைத்துக்கும் ஊக்கமாக, அனைவருக்குள் நின்று அனைத்து செயல்களைச் செய்பவனாகவும், அச்செயல்களின் பலன்களை பெற்றுத் தருபவனாகவும், ஸ்ரீஹரி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அவன் நம் இதயத்தில் நின்று நம்மை நல்வழியில் நடத்திச் செல்லுமாறு பிரார்த்திப்போம். தாஸர்கள் கடைபிடித்த பாதையை நாமும் கடைபிடித்து புண்ணியம் பெறலாம். தாஸ சாகித்யத்தில் உள்ள அமுதத்தை அனைவரும் ருசித்து ஆனந்தம் அடையட்டும் என பகவானை பிரார்த்திக்கிறேன்.
ஹரிதாஸ சாகித்ய வித்யாலயாவின் இந்த இருபதாவது ஆண்டு விழா நன்னாளில் அனைத்து மாணவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
***
ஹரிதாஸ சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை
கன்னட மூலம் : ஸ்மிதா
தமிழில் : திருமதி. சுமதி ராவ்
***
தாஸ சாகித்யம், மத்வ சித்தாந்தத்தின் தத்துவங்கள் மற்றும் அதன் ஆன்மிக ரகசியங்களை சரளமான கன்னடத்தில் சொல்கிறது. ஹரிதாஸர்களின் சேவை மிக மேன்மையானது. அனைவரையும் பக்தி பாதைக்கு அழைத்துச்சென்றது இதன் சிறப்பு. தாஸ சாகித்யம் சர்வ மூல க்ரந்தங்களின் சாரம். இது பக்தியை சொல்லும் இலக்கியம்.
ஶ்ரீமத்வாச்சார்யார் உண்மையில் எல்லோருக்கும் ஜகத்குருதான். ஆனால் சாதாரண மனிதர்களால் சமஸ்கிருத்த்தையும் வேதங்களையும் படித்து புரிந்துகொள்ள முடியாத காரணத்தால் அவற்றை முதல்முறையாக கன்னடத்தில் எழுதி பிரசாரம் செய்தவர் ஶ்ரீ நரஹரி தீர்த்தர். அதன்பின்னர், ஶ்ரீபாதராஜர், ஶ்ரீபுரந்தரதாஸர், ஶ்ரீகனகதாஸர் போன்ற தாஸ ச்ரேஷ்டர்கள் தங்கள் அரிதான படைப்புகளால் பக்தி இலக்கியத்திற்கு மகத்தான தொண்டாற்றி அதை பேணி வளர்த்து இன்றளவும் நாம் அதை படித்து மகிழ வழி வகுத்திருக்கின்றனர்.
பிறப்பு மற்றும் இறப்பிற்கு இடையில் உள்ள வாழ்க்கையில் நாம் எவ்வாறு பக்தி சாதனை செய்ய வேண்டும் என்பதை தெளிவான முறையில் தங்கள் கீர்த்தனைகள் மூலம் எடுத்துச்செல்லி நம்மை இறைபக்தி என்னும் பாதையில் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு பக்தி வரவேண்டும் என்றால் அந்த படைப்புகளின் மீது ஈடுபாடு இருக்க வேண்டும். ஈடுபாடு வந்தால் நம்பிக்கை வரும், நம்பிக்கை வந்தால் ஆர்வம் வரும், ஆர்வம் வந்தால் பக்தி வரும். பக்தி வந்தால் இறை சாதனை வழியில் சென்று முக்தி அடையலாம். இதற்கு மேல் வேறென்ன வேண்டும். இவ்வாறு தாஸ சாகித்யம் பக்தி மற்றும் முக்திக்கு படிக்கட்டுகளாக திகழ்கின்றது.
எதற்காக தாஸ சாகித்யத்தை படிக்க வேண்டும்? அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்றால், அதில் என்ன இல்லை என்றுதான் கேட்க வேண்டும். இதை ருசித்தவருக்குத்தான் இதன் இனிமை தெரியும். ஹரிதாஸர்கள் வர்ணிக்காத விஷயமே இல்லை. எல்லாம் அம்பைப்போல் நேராக மனதைத் தொடும்படி உள்ளன. மற்றும் என்றும் அழியாத வண்ணம் உள்ளன. பகவானை அறிந்துக்கொள்ளவும், தாஸ ச்ரேஷ்டர்கள் படைத்த காவியங்கள் சிறப்பானவை. ஆகையால், தாஸ சாகித்யத்தில் என்ன உள்ளது என்று கேட்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம்தான்.
கலியுகத்தில் பகவத் நாம ஸ்மரணைக்கு அதிக சிறப்பு. ஆகையால், பகவான் அனைத்துக்கும் ஊக்கமாக, அனைவருக்குள் நின்று அனைத்து செயல்களைச் செய்பவனாகவும், அச்செயல்களின் பலன்களை பெற்றுத் தருபவனாகவும், ஸ்ரீஹரி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அவன் நம் இதயத்தில் நின்று நம்மை நல்வழியில் நடத்திச் செல்லுமாறு பிரார்த்திப்போம். தாஸர்கள் கடைபிடித்த பாதையை நாமும் கடைபிடித்து புண்ணியம் பெறலாம். தாஸ சாகித்யத்தில் உள்ள அமுதத்தை அனைவரும் ருசித்து ஆனந்தம் அடையட்டும் என பகவானை பிரார்த்திக்கிறேன்.
ஹரிதாஸ சாகித்ய வித்யாலயாவின் இந்த இருபதாவது ஆண்டு விழா நன்னாளில் அனைத்து மாணவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
***
Sunday, March 12, 2017
வித்யாலயாவின் 20ம் ஆண்டு விழா
வித்யாலயாவின் 20ம் ஆண்டு விழா
ஹரிதாச சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை.
கன்னட மூலம் : திருமதி. சௌபலா
தமிழில் : T.V.சத்ய நாராயணன்
கடந்த 20 ஆண்டுகளாக ஹரிதாச சாகித்யத்தை பரப்பிவரும் நம் குருவாகிய திரு ஹரதி பிரகலாத் அவர்களுக்கு என் மனப்பூர்வமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது இந்தப் பயணத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும் அவரது மனைவியாகிய திருமதி. குஸுமா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு பிரகலாத் அவரின் தலைமையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் ஹரிதாச சாகித்ய வித்யாலயாவானது, இதுவரை சுமார் 1500 மாணவர்களுக்கு அவர்கள் ஹரிதாச சாகித்யத்தைப் பற்றி அறிய உதவியுள்ளது. நமக்குக் கற்றுக் கொடுப்பதில் நம் குரு காட்டும் உற்சாகம் மற்றும் நம்மைப் பாராட்டுவதில் அவர் காட்டும் முனைப்பு நமக்கு மிகவும் சந்தோஷமளிக்கிறது.
தாச சாகித்யம் என்றால் சில பாடல்கள் தெரிந்து கொள்வது என்பது மட்டுமே என்றிருந்த நிலையில், அதற்கு தேர்வுகள் நடத்தி, மேன்மேலும் தெரிந்து கொள்ள வழிவகைகளைச் செய்தவர் நம் குரு அவர்கள். கடந்த 20 ஆண்டுகளாக இடைவிடாமல் பற்பல மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் செய்து, அவர்களை பல்வேறு ஹரிதாசர்களைப் பற்றி தெரியவைத்த நம் குருவை நம் வாழ்நாள் முழுவதும் வணங்கினாலும் தகும்.
ஹரிதாச சாகித்ய மகாவித்யாலயா மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் துவக்கி, மாணவர்களை உருவாக்கி, தேர்வு எழுத வைத்து, அவர்களுக்கு சான்றிதழ்களைக் கொடுத்து, அனைவரின் வீட்டிலும் ஹரிதாச சாகித்யங்களை ஒலிக்கச் செய்வித்தவர் நம் குரு.
ஹரிதாச சாகித்யங்களை படிப்பதால், நாம் இஹ-பர சாதனைகளை அடைவதுடன், ஞான பக்தி வைராக்யத்தையும் அடையலாம்.
குருவின் மூலமே ஸ்ரீஹரியின் பிரசாதம் கிடைக்கும். பகவந்தனின் அனுக்கிரகத்துக்குப் பாத்திரமாவதற்கு, குருவிடம் செலுத்தும் பக்தி மிகவும் முக்கிய காரணம் ஆகும். பகவந்தனின் மகிமை, அவரது கருணை ஆகியவற்றை நமக்கு அறிமுகம் செய்பவர் நம் குருவே ஆகும்.
கு - அஞ்ஞானம் என்னும் இருள்
ரு - ஒளி, ஞானம்
குரு - என்பவர், சிஷ்யரின் அக இருளைப் போக்கி, செய்யவேண்டிய நற்செயல்களை செய்யவைத்து, தெரியவேண்டியவற்றை தெரியவைத்து அவரை முன்னேற்றுபவர்.
தகுதி வாய்ந்த ஒரு குருவின் மூலமே, ஸ்ரீஹரி தன் பக்தர்களை காப்பாற்றுகிறார். ஆகையால், முதலில் நம் குருவின் பாதம் பற்றி வணங்குவது முக்கியம். அவரிடம் பக்தி செய்வது நம் கடமையாகும்.
ஹரிதாச சாகித்யத்தில் என்ன இருக்கிறது என்பவர்கள் இதைப் படித்தால், இதில் என்ன இல்லை என்று கேட்கும் நிலை வரும். இதைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட, இதிலுள்ள ஸ்ரீவாதிராஜரின் மகிமைகள், புரந்தரதாசரின் கீர்த்தனைகள் (புரந்தரோபநிஷத்), நவவித பக்திகளை உள்ளடக்கிய கனகதாசரின் பாடல்கள், விஜயதாசரின் பாடல்கள், ஜகன்னாததாசர் அருளிய (ஸ்ரீமத்வரின் சர்வமூல கிரந்தங்களின் சாரமாகிய) ஹரிகதாம்ருதசாரம், சூளாதிகள், கோபாலதாசரி இயற்றிய கீர்த்தனைகள் இவற்றைப் படிக்க வேண்டும். ஞானம் பெறுவதற்கு இவையே வழிகாட்டியாகும். இவையே முக்திக்கு படிகளாகும்.
20ம் ஆண்டு விழாவில் நம் குருவான ஸ்ரீ பிரகலாத் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு ஆயுர் ஆரோக்கியம் வழங்க வேண்டும் என்று நம் குருவர்ந்தர்யாமி ஸ்ரீபாவிசமீர வாதிராஜ அந்தர்யாமியான ஸ்ரீஹரியின் பாதங்களில் வணங்கிக் வேண்டிக்கொள்கிறேன்.
என்றும் குருவின் சிஷ்யை
ஜி.சௌபலா
ஹரிதாச சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை.
கன்னட மூலம் : திருமதி. சௌபலா
தமிழில் : T.V.சத்ய நாராயணன்
கடந்த 20 ஆண்டுகளாக ஹரிதாச சாகித்யத்தை பரப்பிவரும் நம் குருவாகிய திரு ஹரதி பிரகலாத் அவர்களுக்கு என் மனப்பூர்வமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது இந்தப் பயணத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும் அவரது மனைவியாகிய திருமதி. குஸுமா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு பிரகலாத் அவரின் தலைமையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் ஹரிதாச சாகித்ய வித்யாலயாவானது, இதுவரை சுமார் 1500 மாணவர்களுக்கு அவர்கள் ஹரிதாச சாகித்யத்தைப் பற்றி அறிய உதவியுள்ளது. நமக்குக் கற்றுக் கொடுப்பதில் நம் குரு காட்டும் உற்சாகம் மற்றும் நம்மைப் பாராட்டுவதில் அவர் காட்டும் முனைப்பு நமக்கு மிகவும் சந்தோஷமளிக்கிறது.
தாச சாகித்யம் என்றால் சில பாடல்கள் தெரிந்து கொள்வது என்பது மட்டுமே என்றிருந்த நிலையில், அதற்கு தேர்வுகள் நடத்தி, மேன்மேலும் தெரிந்து கொள்ள வழிவகைகளைச் செய்தவர் நம் குரு அவர்கள். கடந்த 20 ஆண்டுகளாக இடைவிடாமல் பற்பல மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் செய்து, அவர்களை பல்வேறு ஹரிதாசர்களைப் பற்றி தெரியவைத்த நம் குருவை நம் வாழ்நாள் முழுவதும் வணங்கினாலும் தகும்.
ஹரிதாச சாகித்ய மகாவித்யாலயா மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் துவக்கி, மாணவர்களை உருவாக்கி, தேர்வு எழுத வைத்து, அவர்களுக்கு சான்றிதழ்களைக் கொடுத்து, அனைவரின் வீட்டிலும் ஹரிதாச சாகித்யங்களை ஒலிக்கச் செய்வித்தவர் நம் குரு.
ஹரிதாச சாகித்யங்களை படிப்பதால், நாம் இஹ-பர சாதனைகளை அடைவதுடன், ஞான பக்தி வைராக்யத்தையும் அடையலாம்.
குருவின் மூலமே ஸ்ரீஹரியின் பிரசாதம் கிடைக்கும். பகவந்தனின் அனுக்கிரகத்துக்குப் பாத்திரமாவதற்கு, குருவிடம் செலுத்தும் பக்தி மிகவும் முக்கிய காரணம் ஆகும். பகவந்தனின் மகிமை, அவரது கருணை ஆகியவற்றை நமக்கு அறிமுகம் செய்பவர் நம் குருவே ஆகும்.
கு - அஞ்ஞானம் என்னும் இருள்
ரு - ஒளி, ஞானம்
குரு - என்பவர், சிஷ்யரின் அக இருளைப் போக்கி, செய்யவேண்டிய நற்செயல்களை செய்யவைத்து, தெரியவேண்டியவற்றை தெரியவைத்து அவரை முன்னேற்றுபவர்.
தகுதி வாய்ந்த ஒரு குருவின் மூலமே, ஸ்ரீஹரி தன் பக்தர்களை காப்பாற்றுகிறார். ஆகையால், முதலில் நம் குருவின் பாதம் பற்றி வணங்குவது முக்கியம். அவரிடம் பக்தி செய்வது நம் கடமையாகும்.
ஹரிதாச சாகித்யத்தில் என்ன இருக்கிறது என்பவர்கள் இதைப் படித்தால், இதில் என்ன இல்லை என்று கேட்கும் நிலை வரும். இதைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட, இதிலுள்ள ஸ்ரீவாதிராஜரின் மகிமைகள், புரந்தரதாசரின் கீர்த்தனைகள் (புரந்தரோபநிஷத்), நவவித பக்திகளை உள்ளடக்கிய கனகதாசரின் பாடல்கள், விஜயதாசரின் பாடல்கள், ஜகன்னாததாசர் அருளிய (ஸ்ரீமத்வரின் சர்வமூல கிரந்தங்களின் சாரமாகிய) ஹரிகதாம்ருதசாரம், சூளாதிகள், கோபாலதாசரி இயற்றிய கீர்த்தனைகள் இவற்றைப் படிக்க வேண்டும். ஞானம் பெறுவதற்கு இவையே வழிகாட்டியாகும். இவையே முக்திக்கு படிகளாகும்.
20ம் ஆண்டு விழாவில் நம் குருவான ஸ்ரீ பிரகலாத் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு ஆயுர் ஆரோக்கியம் வழங்க வேண்டும் என்று நம் குருவர்ந்தர்யாமி ஸ்ரீபாவிசமீர வாதிராஜ அந்தர்யாமியான ஸ்ரீஹரியின் பாதங்களில் வணங்கிக் வேண்டிக்கொள்கிறேன்.
என்றும் குருவின் சிஷ்யை
ஜி.சௌபலா
ஹரிதாஸ சாகித்யத்தால் ஏற்படட அனுபவம்
ஹரிதாஸ சாகித்யத்தால் ஏற்படட அனுபவம்
ஹரிதாச சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை.
கன்னட மூலம் : திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி
தமிழில் : T.V.சத்ய நாராயணன்
***
மிகவும் ஆசாரமான குடும்பத்தைச் சார்ந்தவளாகிய எனக்கு, சிறிய வயதிலேயே ஹரிதாஸ சாகித்யத்தில் பரிச்சயம் இருந்தது. காலையில் எழுந்ததுமே சுப்ரபாதம் கேட்பது, அதனைத் தொடர்ந்து திரௌபதி வஸ்திராபரண, கஜேந்திர மோக்ஷ, சுதாமா சரித்ரே, கேசவ நாம, விஜய கவச இவற்றையெல்லாம் கேட்டு / பாடிக்கொண்டே வேலைகளை செய்வது வழக்கமாக இருந்தது. வீட்டில் சாலிக்ராம பூஜை, வைச்வதேவம் ஆகியவை நடந்து கொண்டிருந்தன. தாரதம்ய பிரகாரம் ஹரி ஸ்தோத்திரங்கள், பஜனை செய்வது எனக்கு தெரிந்திருந்தது.
என் நண்பர் ஒருவர் ஹரிதாஸ சாகித்யத்தில் தேர்வுகள் எழுதினார் என்று கேள்விப்பட்டதும், மிகவும் சந்தோஷமடைந்து, நாமும் எழுதுவோம் என்று, உடனே நம் வித்யாலயாவுக்கு வந்து தேர்வுகள் எழுத ஆரம்பித்தேன்.
தேர்வுகளை தொடர்ந்து எழுத எழுத, ஹரிதாஸ சாகித்யத்தின் மகிமை, வீச்சு எனக்கு புலப்பட ஆரம்பித்தது. நம் குருவாகிய ஹரதி பிரகலாத் அவர்கள், ஒவ்வொரு தேர்வுக்கும் / சந்தேகத்திற்கும் கொடுக்கும் விளக்கமானது / உதவியானது, நமக்கு ஒரு விடிவிளக்கைப் போல் மிகவும் பயனுள்ளது.
தேர்வுகள் எழுத ஆரம்பித்தபின், அதற்காக படிக்கத் துவங்கியபின், ஒவ்வொரு தேவரநாமாவிற்கும் பொருள் விளங்கத் துவங்கியது. சம்பிரதாயமாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏன் அப்படிச் செய்கிறோம் என்று தெரிந்தது.
புரந்தரதாசர், விஜயதாசர், கோபாலதாசர், ஸ்ரீபாதராயர் என்று சில ஹரிதாசர்களின் பாடல்களையே பாடிக்கொண்டிருந்த எனக்கு, ஹரிதாஸ சாகித்யத்தின் பரம்பரையே தெரிய வந்தது. விஜயதாசருக்கு எப்படி மனக்கதவு திறந்து ஸ்ரீஹரியின் தரிசனம் கிடைத்ததோ, அதைப்போல எனக்கும் இந்த சன்மார்க்கத்தின் அறிமுகம் கிடைத்து, அதன்படி நடக்கவேண்டும் என்று தோன்றியது.
ஹரிதாச சாகித்யத்தின் அறிமுகம் கிடைத்தபின், ஒரு இருட்டறையிலிருந்து வெளியில் வந்து இந்த விசாலமான உலகத்தைப் பார்த்தது போன்ற அனுபவம் எனக்குக் கிடைத்தது. வியாசதத்வம் என்பது மக்களுக்கு புரியாமல் இருந்த காலத்தில், ஹரிதாசர்கள், வேதங்கள், உபநிஷத்துகள் இவற்றின் சாரத்தை எளிய பாடல்கள் மூலம் எழுதி, மக்களிடையில் பக்தி மார்க்கத்தை பரப்பினர்.
எந்த ஒரு கல்வியும் குரு இல்லாமல் கற்க முடியாது. தாசர் பாடல்கள் பற்றி தெரிந்திருந்தாலும், அவற்றின் பொருள் பலருக்கு தெரிந்திருப்பதில்லை. அவற்றைப் பற்றி மென்மேலும் படிப்பதால் மட்டுமே, ஹரிதாஸ சாகித்யத்தைப் பற்றி சிறிதேனும் புரிந்து கொள்ள முடியும். இந்த உதவியைத்தான் நம் குரு பிரகலாத் அவர்கள் மிகவும் சிறப்பாகச் செய்து வருகிறார்.
சிறப்பு மிக்க நம் வித்யாலயாவின் மாணவி என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிணற்றுத் தவளையாக இருந்த எனக்கு இந்த ஹரிதாஸ சாகித்யம் என்னும் பெருங்கடலை அறிமுகம் செய்துவைத்த நம் குருவிற்கு கோடானுகோடி நன்றிகள்.
திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி
தாச சாகித்யம் 10th semester மாணவி
விவேகானந்த நகர், பெங்களூரு
***
ஹரிதாச சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை.
கன்னட மூலம் : திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி
தமிழில் : T.V.சத்ய நாராயணன்
***
மிகவும் ஆசாரமான குடும்பத்தைச் சார்ந்தவளாகிய எனக்கு, சிறிய வயதிலேயே ஹரிதாஸ சாகித்யத்தில் பரிச்சயம் இருந்தது. காலையில் எழுந்ததுமே சுப்ரபாதம் கேட்பது, அதனைத் தொடர்ந்து திரௌபதி வஸ்திராபரண, கஜேந்திர மோக்ஷ, சுதாமா சரித்ரே, கேசவ நாம, விஜய கவச இவற்றையெல்லாம் கேட்டு / பாடிக்கொண்டே வேலைகளை செய்வது வழக்கமாக இருந்தது. வீட்டில் சாலிக்ராம பூஜை, வைச்வதேவம் ஆகியவை நடந்து கொண்டிருந்தன. தாரதம்ய பிரகாரம் ஹரி ஸ்தோத்திரங்கள், பஜனை செய்வது எனக்கு தெரிந்திருந்தது.
என் நண்பர் ஒருவர் ஹரிதாஸ சாகித்யத்தில் தேர்வுகள் எழுதினார் என்று கேள்விப்பட்டதும், மிகவும் சந்தோஷமடைந்து, நாமும் எழுதுவோம் என்று, உடனே நம் வித்யாலயாவுக்கு வந்து தேர்வுகள் எழுத ஆரம்பித்தேன்.
தேர்வுகளை தொடர்ந்து எழுத எழுத, ஹரிதாஸ சாகித்யத்தின் மகிமை, வீச்சு எனக்கு புலப்பட ஆரம்பித்தது. நம் குருவாகிய ஹரதி பிரகலாத் அவர்கள், ஒவ்வொரு தேர்வுக்கும் / சந்தேகத்திற்கும் கொடுக்கும் விளக்கமானது / உதவியானது, நமக்கு ஒரு விடிவிளக்கைப் போல் மிகவும் பயனுள்ளது.
தேர்வுகள் எழுத ஆரம்பித்தபின், அதற்காக படிக்கத் துவங்கியபின், ஒவ்வொரு தேவரநாமாவிற்கும் பொருள் விளங்கத் துவங்கியது. சம்பிரதாயமாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏன் அப்படிச் செய்கிறோம் என்று தெரிந்தது.
புரந்தரதாசர், விஜயதாசர், கோபாலதாசர், ஸ்ரீபாதராயர் என்று சில ஹரிதாசர்களின் பாடல்களையே பாடிக்கொண்டிருந்த எனக்கு, ஹரிதாஸ சாகித்யத்தின் பரம்பரையே தெரிய வந்தது. விஜயதாசருக்கு எப்படி மனக்கதவு திறந்து ஸ்ரீஹரியின் தரிசனம் கிடைத்ததோ, அதைப்போல எனக்கும் இந்த சன்மார்க்கத்தின் அறிமுகம் கிடைத்து, அதன்படி நடக்கவேண்டும் என்று தோன்றியது.
ஹரிதாச சாகித்யத்தின் அறிமுகம் கிடைத்தபின், ஒரு இருட்டறையிலிருந்து வெளியில் வந்து இந்த விசாலமான உலகத்தைப் பார்த்தது போன்ற அனுபவம் எனக்குக் கிடைத்தது. வியாசதத்வம் என்பது மக்களுக்கு புரியாமல் இருந்த காலத்தில், ஹரிதாசர்கள், வேதங்கள், உபநிஷத்துகள் இவற்றின் சாரத்தை எளிய பாடல்கள் மூலம் எழுதி, மக்களிடையில் பக்தி மார்க்கத்தை பரப்பினர்.
எந்த ஒரு கல்வியும் குரு இல்லாமல் கற்க முடியாது. தாசர் பாடல்கள் பற்றி தெரிந்திருந்தாலும், அவற்றின் பொருள் பலருக்கு தெரிந்திருப்பதில்லை. அவற்றைப் பற்றி மென்மேலும் படிப்பதால் மட்டுமே, ஹரிதாஸ சாகித்யத்தைப் பற்றி சிறிதேனும் புரிந்து கொள்ள முடியும். இந்த உதவியைத்தான் நம் குரு பிரகலாத் அவர்கள் மிகவும் சிறப்பாகச் செய்து வருகிறார்.
சிறப்பு மிக்க நம் வித்யாலயாவின் மாணவி என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிணற்றுத் தவளையாக இருந்த எனக்கு இந்த ஹரிதாஸ சாகித்யம் என்னும் பெருங்கடலை அறிமுகம் செய்துவைத்த நம் குருவிற்கு கோடானுகோடி நன்றிகள்.
திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி
தாச சாகித்யம் 10th semester மாணவி
விவேகானந்த நகர், பெங்களூரு
***
Subscribe to:
Posts (Atom)











