Sunday, February 27, 2022

ஸ்லோகம் #5: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #5: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

நிஜமதிய தி3னகரனு முளுக3லு அஜிதனாக்3ஞெய படெ33 மருதனு

ருஜுதபக3ளாசரிஸி பரம விஷுத்34ராகித்33 |

ஸஜனஷேக2ர மத்4யகே3ஹ த்3விஜவரன ஸதியுத3ரத3லி தா

பி3ஜயகெ3ய்த3னு ஹொரகெ33ஹி பே3ரொந்த3னாக்‌ஷணதி3 ||5 

நிஜமதிய தினகரனு - உண்மையான அறிவு என்னும் சூரியன் (ஞான சூரியன்); முளுகலு - மூழ்கத் தொடங்க; அஜிதனாக்ஞெய படத - ஸ்ரீஹரியின் ஆணையைப் பெற்ற; மருதனு - ஸ்ரீவாயுதேவர்; ருஜுதபகளாசரிஸி - ஜப, தபங்களை சரிவர செய்து; பரம விஷுத்தராகித்த - பரம தூய்மையானவராக இருந்த; ஸஜனஷேகர - சஜ்ஜனர்களில் சிறந்தவரான; மத்யகேஹ த்விஜவரன - மத்யகேஹ என்னும் பிராமண ஸ்ரேஷ்டரின்; ஸதியுதரதலி - மனைவியின் வயிற்றில்; ஆக்‌ஷணதி - அந்த சமயத்தில்; பேரொந்து - அந்த கர்ப்பத்தில் இருந்த வேறொரு ஜீவனை; ஹொரகெடஹி - வெளியே இழுத்து; தா - தான்; பிஜயகெய்தனு - அங்கு உள்ளே பிரவேசித்தார். 

மத்வ விஜயத்தின் இரண்டாம் சர்க்கத்தின் விஷயத்தை இங்கு துவக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

உண்மையான அறிவு என்னும் சூரியன் மூழ்கத் தொடங்க, ஸ்ரீஹரியின் ஆணையைப் பெற்ற ஸ்ரீவாயுதேவர், ஜப தபங்களை சரிவர செய்து, பரம தூய்மையானவராக இருந்த, சஜ்ஜனர்களில் சிறந்தவரான, மத்யகேஹ என்னும் பிராமண ஸ்ரேஷ்டரின் மனைவியின் வயிற்றில், அந்த சமயத்தில் அந்த கர்ப்பத்தில் இருந்த வேறொரு ஜீவனை வெளியே இழுத்து, தான் அங்கு உள்ளே பிரவேசித்தார். 

விக்ஞான பானுமதி கால பலேன லீனே

துர்பாஷ்ய சந்தமஸ சந்ததிதோ ஜனேந்தே |

மார்காத்சதாம் ஸ்கலதி கின்ன ஹ்ருதோ முகுந்தம்

தேவாஸ்சதுர்முக முகா: ஷரணம் ப்ரஜக்மு: || (2-1) 

உலகத்தில் சஜ்ஜனர்களின் ஞானம் என்னும் சூரியன், கலியின் பிரபாவத்தாலும், துர்பாஷ்யங்களின் துர்போதனைகளாலும் அஸ்தமனம் ஆகி, அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்து, அவர்கள் தர்மத்தின் வழியிலிருந்து பிறழத் தொடங்கினர். சுக்ஞானம் பிறந்து, அவர்கள் தர்மத்தின் வழியில் திரும்பவேண்டும் என்று பிரம்மாதி தேவதைகள் முகுந்தனை வேண்டினர். ஸ்ரீஹரியானவர் த்ரியுகஹூதி - அதாவது மூன்று யுகத்தில் மட்டுமே அவதாரம் செய்பவர். பிரம்மதேவருக்கோ அவதாரமே இல்லை. 

ஆகையால், இந்த நற்காரியத்தை செய்வதற்கு சர்வக்ஞரான வாயுதேவரால் மட்டுமே சாத்தியம் என்று, ஸ்ரீஹரி வாயுதேவரிடம் வேதாந்த மார்க்க பரிமார்கண தீன தூனா’ (2-3) குழப்பத்தில் இருப்பவர்களுக்கும், சத்-பக்தர்களுக்கும், வேதாதி சாஸ்திரங்களின் உண்மையான பொருளை அறியச்செய்து, என் நற்குணங்களை நிர்ணயம் செய்து சஜ்ஜனர்களை மகிழ்வுறச் செய்என்று ஆணையிட்டார். சுரர்களின் வேண்டுதல், சஜ்ஜர்களின் மேல் இருந்த கருணை, இதற்குமேல் ஸ்ரீஹரியின் ஆணை - என அனைத்தையும் கருத்தில் கொண்டு வாயுதேவர் பூமியில் அவதாரம் செய்ய விருப்பம் கொண்டார். 

கோவிந்த ஸுந்தர கதா ஸுதயா ஸ ந்ருணாம்

ஆனந்தயன்ன கில கேவலமிந்த்ரியாணி | (2-15) 

கர்மபூமியான பரத கண்டத்தில், மேற்கு கடற்கரையோரம் இருக்கும் உடுப்பிக்கு அருகில் இருக்கிறது பாஜக கிராமம். இது பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்ட, துர்காதேவி நிலைகொண்டிருக்கும் விமானகிரி இருக்கும் க்‌ஷேத்திரம். இங்கு நல்மனம், நற்புத்தி கொண்டவர், கல்வி கற்றவர், ஸ்ரீஹரியையே எப்போதும் நம்பும் பக்தரான மத்யகேஹ பட்டர், யோக்யளான, நற்குலத்தில் பிறந்தவரான வேதவதி என்னும் மனைவியுடன் வசித்து வந்தார். தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர், மகாபாரத மற்றும் புராணங்களின் ரகசியங்களை அறிந்தவராகையால் பட்டஎன்று அழைத்துக்கொண்ட இவரை மக்கள் மத்யகேஹ பட்டர்என்று அழைத்தனர். மகாபாரத, ராமாயண புராணங்களில் சொற்பொழிவு ஆற்ற வல்ல மத்யகேஹ பட்டர், கோவிந்தனின் அழகான கதைகளினால் சஜ்ஜனர்களின் மனதை மகிழ்வுறச் செய்துவந்தார். 

சம்பூர்ண லக்‌ஷண சணம் நவ ராஜமான த்வாராந்தரம் பரம சுந்தர மந்திரம் தத் |

ராஜேவ சத்புரவரம் புவனாதி ராஜோ நிஷ்காசயன் பரமசௌ பகவான் விவேஷ || (2-25) 

அந்த கர்ப்பத்தில் இருந்து துக்கம் அனுபவித்துக் கொண்டிருந்த ஜீவனை வெளியே இழுத்து, ஸ்ரீநாராயணனின் பிரதிபிம்பரான வாயுதேவர், தான் உள்ளே பிரவேசித்ததும், அந்த ஜீவன் 32 லட்சணங்களைக் கொண்டதாயிற்று. அங்கிருந்த ஜீவனைச் (குபேரனின் சேவகனான மணிபத்ரன்) சேர்ந்தார். வாயுதேவருக்கு கர்ப்பவாசம் முதலான தோஷங்கள் இல்லை என்று அறியவேண்டும். பூமியில் இவர் அவதாரம் செய்த அந்த நாள் விஜயதசமி. (விளம்பி சம்வத்சரம் ஆஸ்வீஜ சுக்ல தசமி புதன் மதியம்). 

ஸ்ரீமத்வரின் அவதார சந்தர்ப்பத்தை, ஸ்ரீஸ்ரீபாதராஜர், மத்வ நாமாவில் இவ்வாறு கூறுகிறார். 

ஞானி தா பவமான பூதளதொளுத்பவிஸி

மானநிதி மத்வாக்ய நெந்தெனிஸித ||23 

சர்வக்ஞரில்லாத இன்னொருவரால் செய்யப்பட முடியாத வேலையை செய்வதற்கு, பூமியில் அவதரிக்க முடிவு செய்தார் வாயுதேவர். அப்போது, கர்மபூமியான பாரதத்தில் தெற்கு திசையில் பரம சாத்விகரான மத்யகேஹ என்னும் காரணப் பெயருடன் ஒரு தம்பதி வசித்து வந்தனர். ரஜதபீடபுரத்தின் (உடுப்பி) பக்கத்திலிருக்கும் பாஜக அவர்கள் வசித்த க்‌ஷேத்திரம். அந்த பிராமண தம்பதிகள் - வைஷ்ணவர்கள். மிகுந்த கடவுள் பக்தி கொண்ட அன்யோன்ய வாழ்கை வாழ்ந்து வந்தனர். தினமும் புராண, பிரவசனங்களை தவறாமல் செய்து வந்தார் மத்யகேஹர். உடுப்பியின் அனந்தாசனரின் சன்னிதியில், அவரின் சேவைக்காக நிலைத்திருந்த தேவதைகளின் இந்திரியங்க ளுக்கும் இவரது உபன்யாசம் திருப்திகரமாக இருந்தது. 

அந்த தம்பதிகளில் ஸ்ரீலட்சுமி நாராயணரின் சன்னிதானம் வந்தது. சுப முகூர்த்தத்தில், கர்ப்பவதி ஆனார், வேதவதி என்னும் அந்தப் பெண்மணி. அடுத்த பத்தாவது மாதத்தில், பிரசவ காலம் நெருங்கிற்று. அந்த சமயத்தில் முக்ய பிராணதேவர் சரியாக பீமசேனராகி அவதரித்த ஒரு அம்சத்தினால் பூமிக்கு வந்தார். அனந்தாசனரின் முன்பக்கத்தில் இறங்கி அவரை வணங்கி, மத்யகேஹரின் வீட்டுக்கு வந்தார். இதிலிருந்து வாயு தேவருக்கு கர்ப்பவாசாதி தோஷங்கள் (கஷ்டங்கள்) இல்லை என்று தெரியவருகிறது. அதுவரையில் அந்த கர்ப்பத்தில் இருந்து கஷ்டங்களை அனுபவித்த ஜீவனே வேறு. வாயு தேவர் அந்த ஜீவனை வெளியே எடுத்து, தான் உள்ளே பிரவேசித்தார். 

ஹரிகதாம்ருதஸாரத்தில், ஸ்ரீஜகன்னாததாசர், மங்களாசரண சந்தியில், தாரதம்யத்தில் ஸ்ரீமத்வரைப் பற்றி சொல்லும்போது, இவ்வாறு கூறுகிறார். 

க்‌ஷிதியொளகெ மணிமந்தமொதலா

ததிதுராத்மரு ஒந்ததிக விம்

ஷதி குபாஷ்யவ ரசிஸெ நடுமனெயெம்ப பிராம்மணன |

சதிய ஜடரதொளவதரிஸி பா

ரதிரமண மத்வாபிதானதி

சதுரதஷ லோகதொலி மெரெதப்ரதிமகொந்திசுவெ ||8 

மணிமந்தன் முதற்கொண்டு தமோ யோக்யரான தைத்யர்கள் பூமியில் பிறந்து, பிரம்மசூத்திரத்திற்கு 21 குபாஷ்யங்களை இயற்ற, பாரதிபதியான வாயுதேவர், மத்யகேஹ பட்டர் என்னும் பிராமணரின் மனைவியின் வயிற்றில் பிறந்த குழந்தையின் தேகத்தில் பிரவேசித்து, மத்வாசார்யர் என்னும் பெயரால் 14 உலகங்களிலும் புகழடைந்தார். ஒப்புமை இல்லாத (அவரை) வணங்குகிறேன். 

மத்வ விஜய இரண்டாம் சர்க்கத்தைப் பற்றியும், இந்த சர்க்கத்தைப் படிப்பதால் வரும் பலன்களைப் பற்றியும் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தமது ஸ்ரீமத் ஸுமத்வவிஜய ப்ரமேய பல மாலிகா கிருதியில் இவ்வாறு கூறுகிறார். 

ஸச்சாஸ்த்ரே தூ3ஷிதே த்3ருஷ்ட்யை: ஸுரப்ரார்த்த2னயா ஹரே: |

ஆக்ஞயா ஜாவதீர்ணஸ்ய த்3விதீயே பா3ல்ய ஸத்கதா2: ||3|| 

துஷ்ட மக்களிடமிருந்து நற்சாஸ்திரங்கள் அழிந்து வந்த நிலையில், தேவதைகளால் பிரார்த்தனை செய்யப்பட்டு, பகவந்தனின் ஆணைப்படி, வாயுதேவர், பூலோகத்தில் அவதரித்தார். இரண்டாம் சர்க்கத்தில், அனேக பால்ய நற்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கொள்ளு தானியத்தைத் தின்றது; கடன்கொடுத்தவருக்கு புளியங்கொட்டைகளைக் கொடுத்து, கடனிலிருந்து தந்தையை மீட்டது - ஆகிய விஷயங்கள் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. 

இரண்டாம் சர்க்கம் படிப்பதால் வரும் பலன் : நற்குணங்கள் வளர்தல். 

மத்வ விஜயத்தின் இரண்டாம் சர்க்கத்தின் விஷயத்தை, அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.

 

****

1 comment:

  1. Translation, meaning, very simple and easylyunderstood dhanyavad
    GRR

    ReplyDelete