Saturday, July 9, 2022

[பத்யம் #59] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #59] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #59]

முன்னெ விஸ்தரிஸிருவ பரியலி

புண்யதொ3ள்ஸம்ப்ராப்த 4 ஸம்

பன்னத1னு பொந்தி3ரலு தன்னய கார்யவனு நெனெது3 |

இன்னிதர விஷரூப விஷயவ

மண்ணினந்த3தி3 திளிது3 காலவ

சின்னதோ3பாதி3யலி கு3ணிஸுத தத்வபரனாகு3 ||59 

முன்னெ விஸ்தரிஸிருவ பரியலி - முன்னரே நாம் பார்த்ததைப் போல; புண்யதொள் - புண்ணியத்தினால்; ஸம்ப்ராப்த - கிடைத்த; கன ஸம்பன்னதனு - சிறந்த விலைமதிப்பற்ற தேகம்; பொந்திரலு - வந்திருக்க; தன்னய கார்யவனு நெனெது - செய்ய வேண்டிய செயல்களை நினைத்து; இன்னிதர - மற்ற; விஷரூப விஷயவ - விஷத்திற்கு சமானமான விஷயங்களை; மண்ணினந்ததி - மண் போல துச்சமாகவும்; காலவ - காலத்தை; சின்னதோபாதியலி - தங்கத்தைப் போலவும்; திளிது - அறிந்து; குணிஸுத - குதித்தாடியவாறு; தத்வபரனாகு - தத்வத்தை தேடியவாறு இரு. 

காலத்தின் மதிப்பினையும், செய்ய வேண்டிய செயல்களின் முக்கியத்துவத்தையும் இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

மேலே பார்த்தவாறு, பிறவிப்பயன்களால் (புண்ணியங்களால்) இந்த சிறந்த விலைமதிப்பற்ற தேகம் வந்திருக்க, செய்ய வேண்டிய செயல்களை நினைத்து; மற்ற (கெட்ட) செயல்களை விஷத்திற்கு சமானமாக, மண் போல துச்சமாக நினைத்து; காலத்தை தங்கத்தைப் போலவும் அறிந்து; மகிழ்ச்சியில் குதித்தாடியவாறு, தத்வத்தை தேடியவாறு இரு. 

இந்த தேகம் கிடைத்தது அரிதானது, மிகச் சிறப்பானது, இதனை வீணடிக்கக்கூடாது என்பதற்கான உதாரணங்களாக ஹரிதாஸர்களின் பல கிருதிகளை முன்னரே மேலே பார்த்திருக்கிறோம் என்பதால் மறுபடி இங்கே கொடுக்கவிலை.

***

No comments:

Post a Comment