Friday, June 29, 2018

15/360 ஸ்ரீஹரி - உனக்கு நீயே!

ஜ்யேஷ்ட பகுள பிரதமை
15/360 ஸ்ரீஹரி - உனக்கு நீயே!

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



அனைத்து வேதங்களும் புகழும் ஸ்ரீஹரிக்கு சமமோ உயர்ந்தவரோ யாருமில்லை. ‘மத்த: பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்சய’ - ’என்னைவிட மேலானவர் யாருமில்லை’ என்பது கிருஷ்ணனின் வாக்கு. ’அஷ்டமோரஸ: அத்யதிஷ்டன் தஷாங்குலம்’ என்று வர்ணிக்கப்படுகிறார். தாசரின் பாடலில் இந்த தத்வம் அழகாக விளக்கப்படுகிறது. 

ஹரி நீனே சர்வக்ஞ ஸ்வதந்த்ர சர்வாதாரக
ஹரி நீனே சர்வோத்பாதக சர்வேஷ
ஹரி நீனே சர்வஜனக ஹரி நீனே சர்வபாலக
ஹரி நீனே சர்வமாரம ஹரி நீனே சர்வப்ரேரக
ஹரி நீனே சர்வகத ஹரி நீனே சர்வவியாப்த
ஹரி நின்ன கருணதிந்த சிரி ஜகஜ்ஜனனியாகி
ஹரி நின்ன கருணதிந்த பரமேஷ்டி மருதரு குருகளாகிஹவு
ஹரி நின்ன கருணதிந்த கிரிஷேந்த்ரரு பதவி பொந்திதவு
ஹரி நின்ன கருணதிந்த சகலரு ஸ்திதியன்னைதிஹரு
ஹரி குருஜகன்னாதவிட்டலா நினகெ நீனே சமனோ || --ஸ்ரீகுருஜகன்னாததாசர்

படைத்தல் முதலான செயல்கள், அனைத்து நற்குணங்களும் நிரம்பியவன், தோஷங்கள் அற்றவன், ஸ்வதந்த்ரன், அனைத்து ஜட ஜீவர்களை காப்பவன். ஆகவே ஸ்ரீமதாசார்யர் --

அதோ விஷ்ணோ: சர்வோத்தமத்வ ஏவ |
மஹாதாத்வர்யம் சர்வாகமானாம் || என்றார்.

மேலே பார்த்த உகாபோகத்திற்கு சமமான கோபாலதாசரின் பாடல் ஒன்று.

ஹரி சர்வோத்தம சிரி ஆதனராணி
பரமேஷ்டி மகனு ஹரி மொம்மக ஹரிகெ
உரக மஞ்சவு இன்னு கருட ஏரோரதவு
புருஹுத சுரரெல்ல பரிவாதவு ஹரிகெ || -- ஸ்ரீகோபாலதாசர்

வேதவியாசரின் வாக்கு:

நாஸ்தி நாராயண சமம் ந பூதோ ந பவிஷ்யதி 
ஏதேன சத்ய வாக்யேன சர்வார்த்தான் சாதயாம்யஹம் ||

***

1 comment: