Thursday, February 8, 2018

28/40 விபு அவதாரம்

28/40 விபு அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கேள்வி: விபு என்றால் எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவன் என்று பொருள். இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் ஸ்ரீஹரியின் ஒரு காரணப் பெயர்தானே?

பதில்: விபு என்பது வெறும் காரணப் பெயர் மட்டுமல்ல அது ஒரு அவதாரத்தின் பெயர் ஆகும். இரண்டாம் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் ஸ்ரீஹரி, விபு என்று அவதரித்து மிகவும் புகழடைந்தார். 

கே: தற்போதைய வைவஸ்வத மன்வந்தரத்தில் நாம் ராம கிருஷ்ணாதி ரூபங்களைக் கொண்டாடுவதைப் போல், அந்த காலத்தில், விபு என்னும் அவதாரத்தை கொண்டாடினார்களா?

ப: ஸ்ரீஹரியின் விபு ரூபம், மொத்த மன்வந்தரத்திற்கும் அதிபதியாக இருந்தது மட்டுமல்லாமல், அனைத்து பக்தர்களையும் ரட்சணை செய்து அருளிய மிகவும் அற்புதமான முக்கியமான ரூபம். அதற்காகவே இந்த அவதாரத்திற்கு விபு என்ற பெயர் வந்தது. 

கே: இரண்டாம் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் விபு என்னும் அவதாரத்தைத் தவிர, வேறெதும் அவதாரம் நடந்திருக்கிறதா?

ப: ஸ்ரீஹரியின் அவதாரங்கள் அனைத்து காலங்களிலும் நடந்துகொண்டேயிருக்கின்றன. ஆனால், அந்த மன்வந்தரத்தில் பிரபலமான அவதாரம் விபு மட்டுமே.

கே: விபு யாரிடம் அவதரித்தார்?

ப: 
ரிஷேஸ்து வேதஷிரஸஸ்துஷிதா நாம பத்ன்யபூத் |
தஸ்யாம் ஜக்ஞே ததோ தேபோ விபுரித்யபிவிஷ்ருத: ||

வேதஷிர என்னும் ரிஷிக்கும் துஷிதா என்னும் அவரது மனைவியின், தவத்தின் சக்திக்கு மெச்சி, ஸ்ரீஹரி விபு என்னும் பெயரில் இவர்களிடத்தில் அவதாரம் செய்தார். 

கே: விபு அவதாரத்தின் சிறப்பு என்ன?

ப: அஷ்பாஷீதி சஹஸ்ராணி முனயோ யோ த்ருதப்ரதா: |
அன்வஷிக்‌ஷன் ப்ரதம் தஸ்ய கௌமர ப்ரம்ஹசாரிண: ||

88,000 விரதங்களைச் செய்த, பால-பிரம்மசாரி-முனிகள், இந்த விபு என்னும் ஸ்ரீஹரியிடமிருந்து, பிரம்மசர்ய விரதத்தைப் பற்றி தெரிந்துகொண்டனர். 

இப்படி பிரம்மசர்ய விரதத்தை எப்படி அனுஷ்டானம் செய்வது என்பதை சொல்லிக்கொடுத்த இந்த விபு நாமக ஸ்ரீஹரியின் பூஜையை நம் அனைவரின் பிரம்மசர்யத்திற்காக நாமும்கூட எப்போதும் செய்யவே வேண்டும். 

கே: இரண்டாம் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் விபு நாமக ஸ்ரீஹரி அவதரித்தபோது, இந்திராதி பதவிகளில் யார் யார் இருந்தனர்?

ப: சாட்சாத் வாயுதேவரே, ரோசன என்னும் பெயரில் இந்திரபதவியில் இருந்தார். துஷிதர் அப்போது தேவதா பதவியில் இருந்தார். ஓஜஸ்தம்ப முதலான பிரம்மஞானிகளான ரிஷிகள் சப்தரிஷிகளாக இருந்தனர். ஸ்வாரோசிஷ என்பவர் மன்வந்தரத்தின் அதிபதியாக இருந்தார். தைமந்த, ஸுஷேண, ரோசிஷ்மத் முதலானவர்கள் மனுவிற்கு மகனாக இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் மேல், சர்வதந்த்ர ஸ்வதந்த்ரனான விபு என்னும் ஸ்ரீஹரியே இவர்களின் அதிபதியாக இருந்தார். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


No comments:

Post a Comment