Tuesday, February 13, 2018

33/40 ஸ்வதாம அவதாரம்


33/40 ஸ்வதாம அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கேள்வி: 12ம் மன்வந்தரத்தில் ஸ்ரீஹரி எந்த பெயரில் அவதரிப்பார்?

பதில்: ஸ்வதாம என்னும் பெயரில் அவதரிப்பார்.

கே: இவரின் அவதாரத்திற்கு காரணமான தம்பதிகள் யார்?

ப: 
ஸ்வதாமாக்யோ ஹரேரம்ஷ: ஸாதயிஷ்யேதி தன்மனோ: |
அந்தரம் ஸத்யமஹஸ: ஸூன்ருதாயாம் ஸுதோ விப: ||

ஸூன்யதா மற்றும் ஸத்யஸஹ என்னும் தம்பதியரிடம் ஸ்வதாம என்னும் பெயரில் ஸ்ரீஹரி அவதரிப்பார்.

கே: இவரின் சிறப்பு என்ன?

ப: ருத்ரஸாவர்ணி மன்வந்தரத்தை முழுவதுமாக அருள்வதற்காக எடுக்கும் அவதாரம் இது.

கே: அப்போது இந்திராதி பதவிகளில் யார் இருப்பர்?

ப: 
ருததாமா ச தத்ரேந்த்ரோ தேவாஸ்ச ஹரிதாதய: |
ருஷயஸ்ச தபோமூர்திதபஸ்வ் யாக்னேத்ரகாதய: ||

ருததாமனே இந்திரன் ஆவார். ஹரிதர் ஆகியோர் தேவர்களின் பதவிகளில் இருப்பர். தபோமூர்த்தி, தப, அக்னி, இந்திர ஆகியோர் சப்தரிஷிகளின் பதவிகளில் இருப்பர். தேவவான், உபதேவ, தேவஸ்ரேஷ்ட ஆகியோர் ருத்ரஸாவர்ணியின் மகன்கள் ஆவர்.

கே: ஸ்ரீஹரிக்கு ஸ்வதாம என்ற பெயர் வருவதற்கு என்ன காரணம்?

ப: ருததாம என்னும் இந்திரனுக்கு ஸ்வர்க்க லோகத்தை அருளிய ஸ்வதாமன், சர்வதந்திர - ஸ்வதந்திரனாக (அனைத்தையும் அறிந்தவர், சுதந்திரமாக சிந்திக்கக்கூடியவர்) இருந்தார். இவரின் இடத்தை / மகிமையை அடைவதற்கு இவருக்கு இன்னொருவரின் தயை / உதவி தேவைப்படுவதில்லை. ஆகவே, ஸ்வதாம என்னும் மிகப்பொருத்தமான பெயரைப் பெற்றார்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***

No comments:

Post a Comment