Saturday, February 17, 2018

37/40 ப்ருஷ்ணிகர்ப அவதாரம்

37/40 ப்ருஷ்ணிகர்ப அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



ப்ருஷ்ணிகர்ப = Prushnigarbha

கேள்வி: ஸ்ரீஹரிக்கு ப்ருஷ்ணிகர்ப என்னும் பெயர் எப்படி வந்தது?

பதில்: ரிஷியின் மனைவியான ப்ருஷ்ணி என்பவரிடத்தில் அவதரித்த காரணத்தால், ப்ருஷ்ணிகர்ப என்னும் பெயர் வந்தது. அதுமட்டுமல்லாமல், தன் தாயின் பெயரை உலகத்தில் பிரபலப்படுத்துவதற்காக, இந்தப் பெயரை ஏற்றார். 

கே: எந்த மன்வந்தரத்தில் இந்த அவதாரம் நடைபெற்றது?

ப: ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில்.

கே: ப்ருஷ்ணிகர்பனின் தந்தை?

ப: சுதபா என்னும் ப்ரஜாபதி

கே: இவர்களிடத்தில் அவதரிப்பதற்கு என்ன காரணம்?

ப: சுதபா மற்றும் ப்ருஷ்ணி இருவரும், ஸ்ரீஹரியைப் போன்றதொரு குழந்தை தமக்குப் பிறக்கவேண்டும் என்று நான்கு யுக-காலங்களில் கடும் தவத்தை மேற்கொண்டனர். அவர்களின் தவத்தை மெச்சிய ஸ்ரீஹரி, வேண்டிய வரத்தை கேளுங்கள் என்று அவர்கள் முன்னே தோன்றினார்.

கே: ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெற்ற அவர்கள், ஏன் மோட்சத்தை கேட்கவில்லை?

ப: ஸ்ரீஹரியின் தரிசனத்திற்கு முன், அவர்களுக்கு மோட்சமும் கூட அற்பமானதாக பட்டது. ஆகையால், உன்னைப் போன்றதொரு மகனைக் கொடு என்று வரம் கேட்டனர். 

கே: தன்னைப் போன்றதொரு மகனை அவர்களிடத்தில் பிறக்க வைத்திருக்கலாம். ஏன் ஸ்ரீஹரி தானே போய் அங்கே அவதரித்தார்?

ப: இவ்வுலகில் ஸ்ரீஹரிக்கு சமமானவர் என்றால் யாருமே இல்லை. அவருக்கு சமமென்று அவரே இருப்பதனால், சுதபா மற்றும் ப்ருஷ்ணி தம்பதியருக்கு தானே குழந்தையாக அவதரித்தார். 

கே: சுதபா மற்றும் ப்ருஷ்ணி இவர்கள் இருவரும் யார்?

ப: சுதபனே பின்னர் கஷ்யப மற்றும் வசுதேவனாக பிறந்தார். ப்ருஷ்ணி பின்னர் கஷ்பரின் மனைவியாக அதிதியாகவும், வசுதேவனின் மனைவியாக தேவகியாகவும் பிறந்தனர். 

கே: அப்படியென்றால், ஸ்ரீஹரி இந்த தம்பதிகளிடம் எவ்வளவு முறை அவதரித்தார்?

ப: 
சுதபா - ப்ருஷ்ணியாக இருந்தபோது ப்ருஷ்ணிகர்ப.
அதிதி - கஷ்யபராக இருந்தபோது வாமனன்
வசுதேவ - தேவகியாக இருந்தபோது ஸ்ரீகிருஷ்ணன்
என்றும் அவதரித்தார். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


No comments:

Post a Comment