Thursday, February 15, 2018

35/40 ப்ருஹத்பானு அவதாரம்

35/40 ப்ருஹத்பானு அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்




கேள்வி: மொத்தம் 14 மன்வந்தரங்கள் உள்ளன. கடைசி மன்வந்தரத்தில் ஸ்ரீஹரி எப்படி அவதரிப்பார்?

பதில்: இந்திரசுவர்ண என்பதே கடைசி மன்வந்தரம். அப்போது ஸ்ரீஹரி ‘ப்ருஹத்பானு’ என்னும் பெயரில் அவதாரம் எடுப்பார். ப்ருஹத்பானு என்னும் ஸ்ரீஹரி, இந்திர பதவிக்கு வரும் ஷுசி என்பவனுக்கு விசேஷமாக அருளுவார்.

கே: யாரிடம் இவர் அவதரிப்பார்?

ப: ஸத்ராயணஸ்ய தனயோ ப்ருஹத்பானுஸ்ததா ஹரி: |
வினதாயம் மஹாராஜ க்ரியாதந்தூன் விதாயிதா ||

ஸத்ராயண - வினுதாதேவி தம்பதியினரிடம் மகனாக ப்ருஹத்பானு என்னும் பெயரில் ஸ்ரீஹரி அவதரிப்பார். 

கே: இந்த அவதாரத்தின் சிறப்பு என்ன?

ப: யக்ஞங்கள் தொடர்பான காரியங்கள் அனைத்தும் துவங்கியதே இவரிடமிருந்துதான். இந்திராதி தேவர்கள் அனைவருக்கும் அருள்பவரும் இவரே.

கே: அன்றைய அமைப்பில் யார்யார் எந்தெந்தப் பதவிகளில் அமர்ந்திருப்பர்?

ப: உரு, கம்பீரபுத்தி ஆகியோர் மனுவின் புத்திரர்களாக இருப்பர். விசித்ரரு மற்றும் சாக்‌ஷுசாதிகள் தேவர்களின் பதவிகளில் இருப்பர். ஷுசி என்பவர் இந்திர பதவியில் இருப்பார். அக்னி, பாஹு, ஷுசி சித்த, மானஸ ஆகியோர் சப்தரிஷிகளின் இடங்களில் இருப்பர். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***

No comments:

Post a Comment