Wednesday, February 14, 2018

34/40 யோகேஷ்வர அவதாரம்

34/40 யோகேஷ்வர அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கேள்வி: பதிமூன்றாம் மன்வந்தரம் எது? அந்த மன்வந்தரத்தின் அதிபதியின் மக்களின் பெயர் என்ன?

பதில்: தேவசாவர்ணி என்பவர் பதிமூன்றாவது மனு. அவரது பெயரிலேயே மன்வந்தரமும் தேவசாவர்ணி என்று அழைக்கப்படுகிறது. சித்ரசேன, விசித்ர ஆகியோர் இவரது மகன்கள்.

கே: தேவசாவர்ணியை அருள்வதற்காக ஸ்ரீஹரி எப்படி அவதரிப்பார்?

ப: 
தேவஹோத்ரஸ்ய தனய உபஹர்தா திவஸ்பதே: |
யோகேஷ்வரோ ஹரேரம்ஷோ ப்ருஹத்யாம் ஸம்பவிஷ்யதி ||

ஸ்ரீஹரியின் அம்சமான யோகேஷ்வரன் தேவஹோத்ரனின் மகனாக ப்ருஹதிதேவியிடம் அவதாரம் செய்வார்.

கே: யோகேஷ்வர என்று அழைத்துக்கொண்ட ஸ்ரீஹரி, பதிமூன்றாம் மன்வந்தரத்தில் எப்படி அருள்வார்?

ப: திவஸ்பதி என்பவருக்கு இந்திரபதவியை கொடுப்பதன் மூலம், அவரின் விருப்பத்தின் பேரில் வேண்டிய செல்வங்களைக் கொடுத்து மொத்த மன்வந்தரத்தையே அருள்வார். 

மிகுந்த செல்வத்தைப் பெற்றாலும், அனைத்தையும் துறந்து யோகாசக்தன் ஆனதால், ஸ்ரீஹரி  யோகேஸ்வரன் என்று பெயர் பெற்றார். இந்த யோகேஸ்வரன், நமக்கும் நம்முடைய யோக்யதைக்குத் (தகுதிக்குத்) தக்கவாறு, யோக்ய ஞானத்தை வழங்கி அருளட்டும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


No comments:

Post a Comment