Sunday, February 11, 2018

31/40 ஸ்ரீமூர்த்தி அவதாரம்

31/40 ஸ்ரீமூர்த்தி அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்





கேள்வி: ஒன்பதாம் மற்றும் பத்தாம் மன்வந்தரங்களில் எந்த் அவதாரம் நடைபெறும்?

பதில்: தக்‌ஷஸாவர்ணி என்னும் ஒன்பதாம் மன்வந்தரத்தில், ரிஷப நாமகனான ஸ்ரீஹரி அவதாரம் செய்வார். பிரம்மஸாவர்ணி என்னும் பத்தாம் மன்வந்தரத்தில், ஸ்ரீமூர்த்தி எனும் ஸ்ரீஹரி அவதாரம் நடைபெறும். 

கே: ஸ்ரீமூர்த்தி யாரிடம் அவதரிப்பார்?

ப: விஸ்வஸ்ருஜ மற்றும் விஷூசி என்னும் தம்பதியினரிடம், அமைதிரூபமான ஸ்ரீஹரி ஸ்ரீமூர்த்தி என்னும் பெயரில் அவதரிப்பார். 

கே: பிரம்மஸாவர்ணி என்பவன் யார்? அவன் வாரிசுகள் யார்?

ப: உபஸ்லோகனின் மகனே பிரம்மஸாவர்ணி. பூரிஷேண ஆகியோர் இவனின் வாரிசுகள் ஆவர்.

கே: பிரம்மஸாவர்ணி மன்வந்தரத்தில் இந்திராதி பதவிகளில் யார் யார் இருப்பர்?

ப: ஹவிஷ்டான், ஸுக்ருத, ஸத்ய, ஜய, மூர்த்தி இவர்கள் மன்வந்தரத்தின் ரிஷிபதவிகளில் இருப்பர். சுவாசனர், விபுத்தர் ஆகியோர் தேவதா பதவிகளில் இருப்பர். ஷம்புவே இந்திர பதவியில் இருப்பார். பூரிஷேண முதலானவர்கள் இவரின் வாரிசுகளாக இருப்பர்.

கே: ஸ்ரீஹரிக்கு ஸ்ரீமூர்த்தி என்று பெயர் வருவதற்கு என்ன காரணம்?

ப: 
தத்ராபி ஜன்ம பவிதா ஹரேர்விஷ்வஸ்ருஜாம் க்ருஹே |
ஸ்ரீமூர்த்திரிதி விக்யாதோ யோனாப்யாயேத வை ஜகத் ||

எந்த காரணத்திற்காக இந்த உலகத்தையே ஸ்ரீரூபமாக உருவாக்கினானோ, அதே காரணத்திற்காக ஸ்ரீமூர்த்தி என்னும் காரணப்பெயரை ஸ்ரீஹரி பெற்றார்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment