Saturday, February 10, 2018

30/40 பிரபு அவதாரம்

30/40 பிரபு அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்


கேள்வி: நான்காம் மன்வந்தரத்தில் நடந்த ஸ்ரீஹரியின் அவதாரத்தின் சிறப்பு என்ன?

பதில்: தாபஸ ஹரி, நான்காம் தாபஸ மன்வந்தரத்தின் அதிபதி ஆவார். ஐந்தாம் மன்வந்தரத்திற்கு வைகுண்ட, ஆறாம் சாக்‌ஷுஷ மன்வந்தரத்திற்கு அஜிதன், ஏழாம் வைவஸ்வத மன்வந்தரத்திற்கு வாமனன் அதிபதிகளாக இருக்கின்றனர். 

கே: எட்டாம் மன்வந்தரம் எது? மற்றும் அந்த மன்வந்தர அதிபதியான ஸ்ரீஹரியின் அவதாரம் எது?

ப: ஸாவர்ணி என்பது எட்டாம் மன்வந்தரத்தின் பெயர். இதில் ஸ்ரீஹரி, ப்ரபு என்னும் பெயரில் அவதரிப்பார்.

கே: ஸாவர்ணி மன்வந்தரத்தில், இந்திரபதவியை யார் வகித்திருந்தபோது, ப்ரபு நாமக ஸ்ரீஹரி அவதரிப்பார்?

ப: எட்டாம் மன்வந்தரத்தின் இந்திரன் - பலிச் சக்ரவர்த்தி. பலி, இந்திரபதவியை அடைவதற்கு முன்னரே, ஸ்ரீஹரி பிரபு என்னும் பெயரில் அவதரிப்பார்.

கே: எட்டாம் மன்வந்தரத்தின் அதிபதி சாவர்ணி என்பவர் யார்?

ப: வைவஸ்வத மன்வந்தரத்தின் அதிபதியான விவஸ்வான் என்னும் சூரியனின் மகனே ஸாவர்ணி ஆவான். சூரியனுக்கு, சஞ்ஞா மற்றும் சாயா என்று இரு மனைவியர். சாயா என்பவரிடம் சாவர்ணி, தபதி, சனைஸ்வர ஆகிய மூன்று மக்கள் பிறந்தனர். இந்த மூவரில் முதல்வனான ஸாவர்ணி என்பவனே மன்வந்தரத்தின் அதிபதி ஆவான்.

கே: ஸாவர்ணி என்னும் மன்வந்தரத்தின் அதிபதிக்கு ப்ரபுரூபியான ஸ்ரீஹரி எப்படி அருளினார்?

ப: விரோசனனின் மகனான பலியை இந்திர பதவியில் அமர்த்தினார். விரஜர், அமிதப்ரஜர் ஆகியோர்களை தேவதா பதவிகளில் அமர்த்தி, மொத்த மன்வந்தரத்தின் வேலைகளைப் பற்றியும் உபதேசித்து, தானே ஸாவர்ணியில் நின்று மன்வந்தரத்தின் அரசாட்சியை நடத்துவார். இப்படி துவக்கம் முதல் இறுதி வரை, மன்வந்தரத்தை நிறுவியதாலேயே பிரபு என்னும் காரணப்பெயரை ஸ்ரீஹரி பெற்றார். 

கே: இந்த மன்வந்தரத்தில் நடைபெற்ற ஸ்ரீஹரியின் வேறு அவதாரங்கள் யாவை?

ப: எட்டாம் ஸாவர்ணி மன்வந்தரத்தில், பரசுராம மற்றும் வேதவியாஸ ரூபியான ஸ்ரீஹரி, சப்தரிஷி பதவிகளை வகிப்பர். இவரின்கூட அஸ்வத்தாம, க்ருபா, ரிஷ்யஸ்ருங்க, காலவ மற்றும் தீப்திமந்த என்பவர்கள் கூட சப்தரிஷி பதவிகளில் இருப்பார்கள். 

கே: பிரபு ரூபியான ஸ்ரீஹரி யாரிடம் அவதரிப்பார்?

ப: தேவகுஹ்ய மற்றும் ஸரஸ்வதி தம்பதியரிடம் ஸ்ரீஹரி பிரபு என்னும் பெயரில் அவதாரம் செய்வார். இவர் அரசர்களுக்கெல்லாம் அரசராக விளங்குவார். 

தேவகுஹ்யாத் ஸரஸ்வத்யாம் ஸார்வபௌமபதி: பிரபு: |
ஸ்தானம் புரந்தராத்ருத்வா பலயோ தாஸ்யதீஷ்வர: ||

கே: பிரபு நாமக இந்த ஸ்ரீஹரி, பலிக்கு எப்படி உதவினார்?

ப: முந்தைய மன்வந்தரத்தில் புரந்தர என்பவன் இந்திர பதவியில் இருந்தார். அவரிடமிருந்து பதவியைப் பறித்து, பலிக்கு கொடுத்தார் ஸ்ரீஹரி. மற்றும் மன்வந்தரத்தின் இறுதிவரை பலியிடம் பிரபு நாமக ஸ்ரீஹரி அந்தர்யாமியாக இருந்து, மொத்த ஸ்வர்க்காதிபத்யத்திற்கு முக்கியமான காரணம் ஆவார்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


No comments:

Post a Comment