Monday, February 19, 2018

39/40 ராஜராஜேஸ்வர அம்ச-அவதாரம்

39/40 ராஜராஜேஸ்வர அம்ச-அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கேள்வி: ராம கிருஷ்ணாதி ரூபங்களைப் போல், ராஜராஜேஸ்வர அவதாரத்தை ஸ்ரீஹரி எடுத்தார் என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?

பதில்: தனியாக அவதாரம் எடுக்கவில்லை. இது ஆவிஷ்டமான (ஒருவருக்குள் ஸ்ரீஹரியின் அம்சம் சிறப்பாக நிறைந்திருக்கும்) அவதாரம். 

கே: இந்த அவதாரம் யாரிடம் தோன்றியது? எந்த காலத்தில் எடுக்கப்பட்ட அவதாரம் இது?

ப: ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பெற்றோரிடம் நடந்தது என்று இந்த அவதாரத்தை சொல்லமுடியாது. 14 மன்வந்தரங்களில், எவ்வளவு சக்ரவர்த்திகள் இந்த பூமியில் வந்து ஆள்கின்றனரோ, அவர்களுக்கு சக்தி மற்றும் சாமர்த்தியத்தைக் கொடுக்கும் அவதாரமே ராஜராஜேஸ்வர என்னும் அவதாரம். 

கே: அப்படியா? ஆகையால் எல்லா காலங்களிலும் நடைபெறும் அவதாரம்தானே இது?

ப: ஆம். ஆனால் அத்தகைய ராஜன், ஹரிபக்தர் மற்றும் தர்மத்தைப் பின்பற்றுபவராக இருக்கவேண்டும். 

கே: இந்த அவதாரத்தைப் பற்றி எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?

ப: பாகவதத்தில் இரண்டாம் ஸ்கந்தத்தில், ஏழாவது அத்தியாயத்தில் இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.

‘சக்ரம் ச திக்ஷ்வ விஹதம் தஷஸு ஸ்வதேஜோ 
மன்வந்தரேஷு மனுவம்சதயோ பிபர்தி |
துஷ்டேஷு ராஜஸு தமம் விததத் ஸ்வகீர்திம் 
ஸத்யே நிவிஷ்ட உஷதீம் ப்ரதமம்ஸ் சரித்ரை: ||

எல்லா மன்வந்தரங்களிலும் சக்ரவர்த்திகளில் நின்று துஷ்டர்களைக் கொன்று, சஜ்ஜனர்களைக் காப்பாற்றி, பத்து திசைகளிலும் நிலைகொண்டு சங்கு-சக்கரம்-கதை-பத்மம் ஆகியவற்றை ஏந்தி நிறைந்திருப்பவன் ஸ்ரீஹரியான ராஜராஜேஸ்வரன்.

கே: ஸ்ரீமதாசார்யர் இந்த அவதாரத்தைப் பற்றி சொல்லியிருக்கிறாரா?

ப: ஆம். பாகவத தாத்பர்யத்தில் சத்யசம்ஹிதா என்னும் கிரந்தத்தைப் பற்றி சொல்லி இவ்வாறு எழுதுகிறார்.

மன்வந்தரேஷு பகவான் சக்ரவர்தீஷு சம்ஸ்தித: 
சதுர்புஜோ ஜுகோபைதத் துஷ்டராஜன்ய நாஷக: |
ராஜராஜேஸ்வரே த்யாஹுர்முனயஷ் சக்ரவர்தினாம் 
வீர்யதம் பரமாத்மானாம் சங்கசக்ரகதாதரம் ||

நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அபயங்களை ஏந்தியவாறு, ஸ்ரீஹரி, மன்வந்தரங்களில் துஷ்ட சக்ரவர்த்திகளைக் கொன்று, சஜ்ஜனர்களுக்கு அருள்வார். சக்ரவர்த்திகளிடம் இருக்கும் இந்த அவதாரத்தை அனைவரும் ராஜராஜேஸ்வர என்றே அழைக்கின்றனர். 

கே: ப்ருது சக்ரவத்தியிடம் மட்டுமே இந்த ராஜராஜேஸ்வர அவதாரம் நடைபெற்றிருக்கிறது என்கிறார்களே? இது சரியா?

ப: ப்ருது சக்ரவர்த்தியிடம்கூட ராஜராஜேஸ்வர என்னும் ரூபத்தின் ஆவேசம் இருக்கிறது. அதேபோல், ப்ரியவ்ரத முதலான அனைத்து சக்ரவர்த்திகளிடமும் இந்த ரூபம் உள்ளது. ப்ருது சக்ரவர்த்தியிடம், இது மட்டுமல்லாது, ‘ப்ருது’ என்னும் ஸ்ரீஹரியின் அம்ச-அவதாரமும் உள்ளது.

கே: ராஜராஜேஸ்வர என்னும் ஸ்ரீஹரியின் ரூபத்தை எப்படி நினைக்கவேண்டும்?

ப: மொத்த பூமண்டலத்தையும், ஸ்ருஷ்டி முதல் பிரளய காலம் வரை, காக்கும் பொறுப்பு இந்த ரூபத்திற்கு உண்டு. ஒவ்வொரு நொடியும் நம் அனைவரையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்த ரூபத்தை நாம் போற்றிப் பாடவேண்டும். அனைவரும் இந்த ரூபத்தை பக்தியுடன் வணங்கவேண்டும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


No comments:

Post a Comment