Monday, February 12, 2018

32/40 தர்மசேது அவதாரம்

32/40 தர்மசேது அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்


கேள்வி: தர்மசேது என்னும் ஸ்ரீஹரியின் அவதாரம் எப்போது நடைபெற்றது?

பதில்: பதினொன்றாம் தர்மஸாவர்ணி மன்வந்தரத்தில் தர்மசேது என்று ஸ்ரீஹரி அவதாரம் எடுக்கிறார்.

கே: தர்மசேது அவதாரத்திற்கு யார் காரணம்?

ப: ஆர்யக - வைத்ருதா என்னும் தம்பதியருக்கு ஸ்ரீஹரி தன் அம்சமான தர்மசேது என்னும் பெயரில் அவதரிப்பார்.

கே: தர்மஸாவர்ணி மன்வந்தரத்தில் ஸ்ரீஹரி மூன்று உலகங்களையும் எப்படி காப்பாற்றினார்?

ப: வைத்ருத என்னும் இந்திரனை காப்பாற்றுவதன் மூலம், விஹங்கமர், காமகமர், நிர்வாணர் முதலான தேவதைகள் மற்றும் அருண முதலான ரிஷிகளை காப்பாற்றுவதின் மூலம் மொத்த மன்வந்தரத்தையே காப்பாற்றுபவர் ஆகிறார்.

கே: மன்வந்தரத்தின் அதிபதியான தர்மஸாவர்ணி, ஸ்ரீஹரியிடம் எப்படி சரணடைந்தார்?

ப: மனோபலம் நிறைந்த தர்மஸாவர்ணி, பதினொன்றாம் மன்வந்தரத்திற்கு அதிபதியாவதற்கு ஸ்ரீஹரியையே சரணடைந்தார். அந்த தர்மனிடம், ஸ்ரீஹரி, சேதுவாக அவதரித்தார். ஆகையால் இவருக்கு தர்மசேது என்ற பெயர் வந்தது. 

ஸத்ய, தர்ம ஆகியவற்றைப் பின்பற்றி, தர்மஸாவர்ணியை காப்பாற்றி, அவரின் மகன்களான ஸத்ய, தர்ம ஆகியோர்களையும் காப்பாற்றி, தர்மசேதுவான ஸ்ரீஹரியே நம் எல்லா தர்மங்களுக்கும் சேதுவாகி அருளட்டும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment