Friday, July 29, 2022

[பத்யம் #78] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #78] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 78]

அடி33டி3கெ3 ஹரிதோ3டு3திஹ மன

தடெ3து3 3ஹு கஷ்டத3லி நில்லிஸி

பி33தெ3 அப்4யாஸத3லி ஸாதி4பதொ3ந்து3 3கெ3 மத்தெ |

நடு3கு3தலி து3ர்விஷய போ43க்கெ

எட3பி33தெ3 ஸத்3விஷய மாத்ரவ

த்4ருட3தி3 பு4ஞ்சிஸி ஹரிகெ3 அர்ப்பிப 3கெயு மத்தொந்து3 ||78 

அடிகடிகெ - அடிக்கடி; ஹரிதோடுதிஹ - பாய்ந்தோடும்; மன - மனதினை; பிடதெ - விட்டுவிடாமல்; பஹு கஷ்டதலி - மிகவும் கஷ்டப்பட்டு; தடெது - தடுத்து; நில்லிஸி - நிறுத்தி; அப்யாஸதலி - இப்படிப்பட்ட பயிற்சியால்; ஸாதிபதொந்து பகெ - சாதிப்பது ஒரு வகை; மத்தெ - இன்னொன்று என்னவெனில்; துர்விஷய போகக்கெ - கெட்ட விஷயங்களை செய்வதற்கு; நடுகுதலி - நடுங்கியவாறு; த்ருடதி - திட மனதுடன்; ஸத்விஷய மாத்ரவ - ஸத்விஷயங்களை மட்டுமே; எடபிடதெ - தொடர்ந்து; புஞ்சிஸி - செய்தவாறு; ஹரிகெ அர்ப்பிப - அனைத்தையும் ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்வது; மத்தொந்து பகெயு - இன்னொரு விதமாகும். 

மனதினை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை இந்த பத்யத்தில் அழகாக விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

அங்கங்கே அலைபாயும் மனதினை, விட்டுவிடாமல், மிகவும் கஷ்டப்பட்டு பயிற்சி செய்து, மனதினை தடுத்து நிறுத்துவது ஒரு வகை. இன்னொன்று என்னவெனில், கெட்ட விஷயங்களை செய்வதற்கு, நடுங்கியவாறு, திட மனதுடன், ஸத்விஷயங்களை மட்டுமே தொடர்ந்து செய்தவாறு, அனைத்தையும் ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்வது இன்னொரு விதமாகும். 

மன வசன காய ப்ரத3க்ஷணெ

அனுதி3னதி3 ஸர்வத்ர வியாபக

வன ருஹேக்ஷண 3ர்ப்பிசுத மோதி3ஸுதலிரு ஸதத | 

மனதால், வாக்கினால், தேகத்தால் செய்யும் அனைத்து காரியங்களையும், ஸ்ரீபரமாத்மனுக்கு செய்யப்படும் பிரதட்சிணை என்று நினைத்து, அவற்றை ஸ்ரீபரமாத்மனுக்கு அர்ப்பித்து, மகிழ்ச்சி அடைந்துகொண்டிரு. இந்த விஷயங்களை சொல்லிப் பலனில்லை. அனுபவத்திற்குக் கொண்டு வா. முக்திக்கு இதைவிட சாதனை என்று எதுவும் இல்லை - என்று ஹரிகதாம்ருதஸாரத்தில் ஸ்ரீஜகன்னாததாஸர் கூறுகிறார்

***


Thursday, July 28, 2022

[பத்யம் #77] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #77] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #77]

மனவ நிக்3ரஹிஸத3லெ மாடு3

4னத1பவு ஜபதா3 மௌனக3

ளினிது1 டா3ம்பீ4கவெனிஸி வ்யர்த்த2தி3 போபுத3னு திளிது3 |

க்ஷண பி33தெ3 ஹரி பாத3 பத்3மதி3

அனுனயதி3 மனெமாடி3 நிலிஸுத

அனுப4வத3 ஸாத4னதி3 ஸாதி4ஸு த்4யானகோ3சரன ||77 

மனவ - மனதினை; நிக்ரஹிஸதலெ - அடக்காமலேயே; மாடுவ - செய்யப்படும்; கனதபவு - கடுமையான தவம்; ஜபதான - ஜபம், தானம்; மௌனகளு - மௌன விரதங்கள்; இனிது - இவை; டாம்பீகவெனிஸி - ஆடம்பரம் எனப்பட்டு; வ்யர்த்ததி - வீணாக; போபுதனு - செல்கின்றன என்பதை; திளிது - அறிந்து; க்ஷண பிடதெ - ஒரு நொடியும் விடாமல்; ஹரிபாத பத்மதி - ஹரி பாத பத்மங்களில்; அனுனயதி மனெமாடி நிலிஸுத - இடைவிடாமல் நிலை நிறுத்தி; அனுபவத - அந்த அனுபவத்தின்; ஸாதனதி - ஸாதனத்தினால்; த்யானகோசரன - தியானத்தினால் கண்டறியப்படுபவனை; ஸாதிஸு - கண்டறிவாயாக (அடைவாயாக). 

பிம்பரூப தரிசனத்தின் வழிமுறையை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

மனதினை அடக்காமல் செய்யப்படும் கடுமையான தவம், ஜபம், தானம், மௌன விரதங்கள் ஆகியவை, ஆடம்பரம் எனப்பட்டு, வீணாகப் போகின்றன என்பதை அறிந்து, ஒரு நொடியும் விடாமல் ஹரிபாத பத்மங்களில் மனதினை இடைவிடாமல் நிலை நிறுத்தி, அந்த அனுபவத்தின் ஸாதனத்தினால், தியானத்தினால் கண்டறியப்படுபவனை கண்டறிவாயாக. 

மனதில் பகவந்தனை நிறுத்தி, செய்யப்படும் காரியங்களால் ஆகும் பலன்களை ஸ்ரீஜகன்னாததாஸர், இந்த ஹரிகதாம்ருத பத்யத்தில் இவ்வாறு விளக்கியுள்ளார். 

ஹலவு 3கெ3யலி ஹரிய மனத3லி

ஒலிஸி நில்லிஸி ஏனு மாடு3

கெலஸக3ளு அவனங்க்4ரி பூஜெக3ளெந்து3 நெனெவுதிரு |

ஹலத4ரானுஜ தானெ ஸர்வ

ஸ்த2லக3ளலி நெலெஸித்து3 நிஸ்ச

ஞ்சல 4கு3தி ஸுக்3ஞான பா4க்3யவ கொட்டு ஸந்தெயிப ||28 

அனைத்து விதங்களிலும் பரமாத்மனிடம் திடமான பக்தியை வைத்து, அந்த பக்தியினால் பரமாத்மன் தரிசனம் கொடுப்பது போல செய்து, சஞ்சலமற்ற மனதுடன் பரமாத்மனை நிறுத்தி, நீ செய்யும் ஒவ்வொரு வேலையும் பரமாத்மனின் பூஜை என்றே நினைத்திரு. இப்படி செய்வதால், ஸ்ரீகிருஷ்ணன் தானே அனைத்து இடங்களிலும் இருந்து, நீ செய்யும் அனைத்து செயல்களையும் தன் பூஜையென்றே ஏற்றுக்கொண்டு, சிறந்த பக்தியை, திவ்யஞான செல்வத்தைக் கொடுத்து உனக்கு அருள்வான் என்று தாசராயர் அன்புடன் சஜ்ஜனர்களுக்கு உபதேச ரூபமாக சொல்லியிருக்கிறார்.

***