Friday, September 16, 2022

[பத்யம் #119] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #119] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் 119]

மருத ஶாஸ்த்ரத3 மர்மவரியதெ3

3ரிதெ3 ப்3தா4ர்த்த23 வாதி3ஸி

பி3ரது3 பா3வலிக3ளிகெ3 3டி3தா3டு3வுது3 கைபி3ட்1டு1 |

ஹரிய கு3ணகா3னத3லி சித்தவு

கரகி3 தன்னொளு தானு ஸுக2வனு

ஸுரிவ ஸர்வோத்க்ருஷ்ட ஸ்தி2தியனு பொந்து3 யத்னத3லி ||119 

மருத ஷாஸ்த்ரத - மத்வ மதத்தின்; மர்மவரியதெ - மர்மங்களை (தத்வ ரகசியங்களை) அறியாமல்; பரிதெ - வெறும்; ஷப்தார்த்தகள - சொற்களை, அதன் அர்த்தங்களை; வாதிஸி - வாதித்து; பிரது பாவலிகளிகெ - விருது, பட்டங்களுக்கு; படுதாடுவுது - அடித்துக் கொள்வதை: கைபிட்டு - விட்டுவிட்டு; ஹரிய குணகானதலி - ஸ்ரீஹரியின் குணங்களைப் பாடுவதில்; சித்தவு கரகி - மனதை நிறுத்தி; தன்னொளு தானு - தனக்குள்ளேயே; ஸுகவனு ஸுரிவ - சுகத்தைப் பெறுவதான; ஸ்ர்வோத்க்ருஷ்ட - மிகச் சிறந்ததான; ஸ்திதியனு - நிலையை; யத்னதலி - மிகவும் முயற்சி செய்து; பொந்து - அடைவாயாக. 

மத்வ மத ரகசியங்களை தொடர்ந்து மனனம் செய்ய வேண்டியதன் அவசியத்தை இங்கு விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

மத்வ மதத்தின் மர்மங்களை (தத்வ ரகசியங்களை) அறியாமல், வெறும் அதன் சொற்களை, அதன் அர்த்தங்களை, வாதித்து, விருது / பட்டங்களுக்கு அடித்துக் கொள்வதை விட்டுவிட்டு, ஸ்ரீஹரியின் குணங்களைப் பாடுவதில், மனதை நிறுத்தி, தனக்குள்ளேயே சுகத்தைப் பெறுவதான, மிகச் சிறந்ததான நிலையை மிகவும் முயற்சி செய்து அடைவாயாக. 

இதே விஷயத்தை ஸ்ரீஜகன்னாததாஸர், ஸ்வாச சந்தியில் இவ்வாறு கூறியிருக்கிறார் என்பதை பார்க்கிறோம். 

பெ3ளகி3த்3ஹூஜியு நோள்பரிகெ3 2

2ளிஸுதலி கங்கொ3ளிஸுவந்த3தி3

தொளெது3 தே3ஹவ நாம முத்3ரெக3ளிந்த3லங்கரிஸி |

ஒலிஸி நித்ய குதர்க்க யுக்திக3

ளலவ போ44 ஷாஸ்த்ர மர்மவ

திளியதி3 நர 3ரிதெ3 இத3ரொளு ஷங்கிஸித3ரேனு ||(15-22) 

நன்றாக கழுவிய சிறிய கழுத்துள்ள பாத்திரம் (சொம்பு) அதை பார்ப்பவர்களுக்கு பளபள என்று ஒளிர்வதைப் போல சரீரத்தை சுத்தம் செய்து 12 நாமங்கள், முத்ரைகளால் அதனை அலங்கரித்து ஸ்ருதி ஸ்ம்ருதிகளை பின்பற்றாமல் வெறும் தந்திரங்களால் ஊகிக்கும் கு-தர்க்கத்தை படித்து ஸ்ரீ பூர்ணப்ரக்ஞரின் (ஸ்ரீமன் மத்வாசார்யரின்) சர்வமூல கிரந்தங்களின் உள் அர்த்தத்தை அறியாத மனிதன் பிரயோஜனம் இல்லாமல் இந்த கிரந்தத்தில் சந்தேகப்பட்டால் என்ன பிரயோஜனம்?

****


No comments:

Post a Comment