Friday, March 3, 2023

#110 - 315-316-317 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 315. ஸ்ரீ விஶிஷ்டாய நம:

ஆனந்த3 3 ஞானாத்3யுத்தம கு3ணவந்தனெந்து3

அனக4வேத3 வாக்யக3ளிந்த3 விஹிதவிஶிஷ்ட

நமோ எம்பெ3னு ப்ரளயத3லி அவஶிஷ்டனு

நீனெ ஸர்வவ உத3ரதொ3ள் இட்டுகொண்டு3 இருவி 

ஆனந்த, பல, ஞானங்களில் சிறந்தவன். அனைத்து வேத வாக்கியங்களால் போற்றப்படுபவன் ‘விஶிஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரளயத்தில் நீ மட்டுமே இருக்கிறாய். அப்போது அனைத்தையும் உன் வயிற்றில் வைத்துக் கொண்டிருக்கிறாய்.  

316. ஸ்ரீ ஶிஷ்டேஷ்டாய நம:

4க்தர அபீ3ஷ்டகள பூர்ணமாடு3விஶிஷ்டேஷ்ட

ஸதா3 நமோ நினகெ3 முக்தாஸ்ரய முக்தர ஸ்வாமி

மோத3மய நீ ஸர்வதா3 4க்தரிந்தா3ராதி3தனு

முத3தி3 ஸ்ரீ லட்சுமியிந்த3 ஸ்துதிஸிகொம்பி3 ப்ரளயதி3 

பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவனே. ஶிஷ்டேஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். முக்தர்களின் கதி நீயே. ஆனந்தமயனே. நீ எப்போதும் பக்தர்களால் வணங்கப்படுபவன். மகிழ்ச்சியுடன், பிரளய காலத்தில், ஸ்ரீலட்சுமிதேவியால் வணங்கப்படுகிறாய். 

317. ஸ்ரீ ஶிக2ண்டி3னே நம:

ஶத்ருக3 அதிஸுக2 2ண்டி3ஸுவவனு நீனு

கரெஸிகொள்ளுவிஶிக2ண்டி3எம்பு3 நாமதி3ந்த3

பரிமிதி இல்லத3 ஶ்சர்யகரவாத3 தேஜஸ்

பரம அத்3பு4 மஹைஶ்வர்ய ரூபனு ஶிக2ண்டி3யு 

எதிரிகளை அதிகமாக எதிர்ப்பவன் நீ. அழைத்துக் கொள்கிறாய் ‘ஶிகண்டி என்று. எல்லைகள் அற்ற ஆச்சரியமான தேஜஸ் கொண்ட, பரம அற்புதமான ஐஶ்வர்ய ரூபன் நீயே.

***


Thursday, March 2, 2023

#109 - 312-313-314 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

312. ஸ்ரீ ஸஹஸ்ரஜிதே நம:

பூர்ணஸ்ய ஒத3கி3ஸுவஸஹஸ்ரஜித்நமோ எம்பெ3

ஏனெம்பெ3 நின்ன ஓஜஸ்ப3 ஸஹஸ்ர எந்தெ3னிப

3ணனெகெ3 ஹெச்சாத3 அஸுரரன்ன ஜயிஸுவி

நின்ன 3லமஹாத்ம்ய பூர்ண அரியலு ஶக்ய 

பூர்ணமானவனே. வரங்களை அளிப்பவனே. ஸஹஸ்ரஜிதனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய எல்லையற்ற ஆளுமை, வலிமைகளை நான் என்னவென்று சொல்வேன். அனைத்து அசுரர்களை நீ வெல்கிறாய். உன்னுடைய வலிமைகளை மகிமைகளை முழுமையாக அறிவது அசாத்தியமானது. 

313. ஸ்ரீ அனந்தஜிதே நம;

அனந்த போ4க்3 வஸ்துக3 ஈவி நீஅனந்தஜிதா

அனந்த போ4க்3 வஸ்து ஜேதா நமஸ்தே ஆப்தகாமாய

ஸ்தா2 பே43தி3ந்த3லோ கால பே43தி3ந்த3லோ நீனு

ஏனு கொரதெ இல்லத3 பூர்ண காம போ4க்3யஜேதா 

அனந்தமான போக்ய வஸ்துகளை நீ அருள்கிறாய். ஹே அனந்தஜிதனே. அந்த வஸ்துகளில் ஒளியாக நீயே இருக்கிறாய். அனைவருக்கும் ஆப்தகாமனே. கால, தேச, இடங்களால் நீ எவ்வித குறைகளும் இல்லாத பூரணமானவன். 

314. ஸ்ரீ இஷ்டாய  நம:

பரம ப்ரியனாத3வனுஇஷ்டனேநமோ எம்பெ3

பரிபரி யக்ஞதி3ந்த3 பூஜிதனாது33ரிந்த3

ஸ்ரீ ரமாபதி நீனு இஷ்டனு எந்தெ3னிஸி கொண்டி3

பரோவரிய நீனேவெ ஸ்ரேஷ்டதமனாகி3ருவி 

பரமப்ரியமானவனே. இஷ்டனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பற்பல யக்ஞங்களால் நீ பூஜிக்கப்படுவதால், ஹே ரமாபதியே, நீ இஷ்டன் எனப்படுகிறாய். நீயே ஸர்வோத்தமனாக இருக்கிறாய்.

***


Wednesday, March 1, 2023

#108 - 309-310-311 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

309. ஸ்ரீ மஹாஶனாய நம:

மஹாஶத்ரு ஸமுதா3 நாஶமாள்பமஹாஶன

அஹர்நிஶி நமோ நினகெ3 ஆதி3தை3த்யன ஸீள்தி3

மஹி உத்3தா4 ஆதி3வராஹ காஞ்சன ஶிபு

ஸம்ஹாரக ம்ருத்யுமாரக ந்ருஹரே பாஹிமாம் பாஹி 

மிகப்பெரிய எதிரி சமூகங்களை அழிப்பவனே. மஹானே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆதி தைத்யனை நீ கொன்றாய். பூமியை காப்பாற்றினாய். ஆதி வராகனே. ஹிரண்யகசிபுனை கொன்ற நரசிம்மனே, எனக்கு அருள்வாயாக. 

310.ஸ்ரீ அத்3ருஶ்யாய நம:

ப்ராக்ருதேந்த்3ரிய த்3ருஷ்டிகோ3சரனாக3தெ3அத்3ருஷ்ய

பா3கி3 ஶிர நமோ ஸூத்ரவுதத3வ்யக்தமாஹஹி

நீ க்ருபதி3 ஒலிது3 நின்னிச்செயிந்த3லெ தோருவி

நீ காணிஸிகொள்ளலாரி நின்னிச்சாவின: யாரிகு3 

நம்முடைய ப்ராக்ருத இந்திரியங்களுக்கு தென்படாமல், மறைந்து நிற்பவனே. அத்ருஶ்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரிலும் இருந்து, உன் இஷ்டப்படியே நீ காட்டிக் கொள்கிறாய். உன் இஷ்டம் இல்லாமல், நீ யாருக்கும் தென்படுவதில்லை. 

311. ஸ்ரீ வ்யக்த ரூபாய நம:

பத்3மஜாண்ட3 நிர்மாத்ரு தத்க3 பதார்த்த23ளல்லி

நீ 3யதி3 ஹுட்டிஸி நின்னதீ4 ஶ்ரயத3லி

ஹிதவாகி3ருவுவுவ்யக்த ரூபஶ்ச நமோ ஆத்மா

வாரே த்3ருஷ்டவ்யோஸாத4 மெச்சி நின்னிச்செயிம் தோர்வி 

இந்த உலகத்தை படைத்து, அதில் உள்ள ஒவ்வொரு பதார்த்தங்களை படைத்து, அவற்றில் நீ இருந்து, உன் அதீனமாகவே வைத்துக் கொண்டு, அவற்றை காக்கிறாய். வ்யாக்தரூபாயனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களின் ஸாதனைகளை நீ மெச்சி, உன்னுடைய விருப்பப்படி அவர்களுக்கு தரிசனம் அளிக்கிறாய்.

***